Sunday, June 6, 2021

ஏரெடுத்து நிலத்தினில் அவள் எழுதும் கவிதை

காடு வெட்டி கல் பொறுக்கி 

கம்பு சோளம் தினை வெதச்சு 

மேடு வெட்டி முள் பொறுக்கி 

முத்து சோளம் தினை வெதச்சு 


நீர் ஆடையின்றி அம்மணமாய் ஓடும் நதி 

நீராட வழியின்றி தவித்து ஓடும் விதி 


வளர்ந்து விட்ட பருவப்பெண்போல வெக்கமா ...

தலையை வளச்சு பாக்கிறியே தரையின் பக்கமா 


மண்மகளை தொழுது மாடு பூட்டி 

பொன்மகள் வலம் வந்தாள் ஏர் ஓட்டி  

காளையதன் கழுத்தில் கிண்கிணி ஒலிக்கும் 

கன்னியவள் காதில் மணி சிணுங்கும் 

ஏடெடுத்து உன் நினைவில் நான் எழுதும் கவிதை 

ஏரெடுத்து நிலத்தினில் அவள் எழுதும் கவிதை 

உன் கால் பட்ட நிலத்தினில் விளைந்திடும் பொன்னே 

கனவுகள் நனவாகும் காலம் இருக்குது பின்னே