Saturday, December 20, 2025

நிலா

ஏனோ தெரியவில்லை!

கடைசி குச்சி 

பற்ற வைக்கும்போது மட்டும் 

கவனம் 

வந்து விடுகிறது!

🍁

அதிகமாக

ரசிக்கப்பட்டாலும்..

நிலா

அனாதைதான்!

🍁
மறக்கவே முடியாத முகமும்
மறக்கத் துடிக்கின்ற முகமும்
ஒரே முகமாக
அமைந்து விடுகிறது 
************
தேடப்படுபவனும்
தேடுபவனும்
ஒன்றே!
***************
எங்கேயோ
கொண்டு போகிறாய்...
தொடர்கிறேன்...
***************************
இதயத்தை
மூடிக்கொண்டு 
கண்களை 
திறந்து 
எதை
பார்க்கப் போகிறாய்?
***************************
பழக
பழக
புளிக்கும் 
என்றார்கள்...
இனிக்கிறதே?
தப்பாக 
சொல்லிவிட்டார்களோ!?
********************************

Friday, December 19, 2025

கோலம்

ஒரு ஓவியம்
புவியில்
கவிதை எழுதுவதை
வியந்து பார்க்கிறது 
நிலா!.
***************************
இந்த வார
பட்டிமன்ற 
தலைப்பு .....
எந்த 
நாளில்
உனது
கோலம் அழகு !!?
தீர்ப்பு
காலவரையின்றி
ஒத்தி வைக்கப்பட்டது!!
***************************
நிலம் 
ஏன் அதிர்கிறது?
நீ 
பொட்டு வைப்பதால் 
சிலிர்க்கிறதோ 
பூமி?
***************************
எப்படி
சம்மதித்தது
கோலமாவு...?
உன் 
விரல்களை விட்டு
இறங்குவதற்கு!!
***************************
கோலம்
எப்படி 
என்கிறாய்!!
எந்த
கோலத்தை
ரசிப்பது
நான்?
***************************
எனக்குத்தான் 
தெரியுமே...
உனது
கோலத்தை
ரசிக்க
இருவிழி
போதாதென்று!!
***************************
உயிர் காக்க
அழைக்கிறான்
மார்க்கண்டேயன் ...

எப்படி
தாண்டி
போவது...?

இந்த
கோலத்தை?
***************************
உன்
காதலால்
நேரான
கோடுகள்
ஆங்காங்கே
வளைகிறதே
நாணத்தால்!!
***************************
கோலமிட்டு 
விட்டாயா?

உதிப்பதற்கு
உத்தரவு
கேட்கிறான் 
சூரியன்!
***************************
உன்
கோலத்தை
நகலெடுக்க 
வானில்
நட்சத்திர 
புள்ளிகளை
வைத்துவிட்டு
ஒளிந்து
பார்க்கிறது
நிலா!!
***************************
நீ
கோலம்
போட்டதால்தானோ
இதனை
புண்ணிய பூமி
என்கிறார்கள்!!?
***************************
நீ
கோலமிட்ட 
பூமி
இனி ...

கோள வடிவா!?
கோல வடிவா!?
***************************

எறும்புகளுக்கு
பசிக்குமென்று
அரிசிமாவால்
கோலமிடுகிறாய்!!

உன் கோலத்தை
கலைக்க
மனமின்றி
பசியடக்கும் 
வரம் கேட்கின்றன
எறும்புகள்!!
***************************
கோலமாவால் 
வெறும் 
புள்ளிகளையும் 
கோடுகளையும் 
வைத்தே 
கவிதை 
எழுதி விட்டாய் !
எதை 
எழுதுவது 
என்று 
திகைக்கிறது 
எனது 
தமிழும் 
எழுத்தாணியும் !!
***************************