Sunday, December 3, 2023

கோபுரத்தருகே

எப்போதும் 

தலைகுனிந்தே 

நடக்கும் 

உன் 

முகம் காண 

காத்திருக்கிறேன் 

கோபுரத்தருகே ...


நிமிர்ந்து 

பார்த்து

கும்பிடாமலா

போய் 

விடுவாய் !!

====≈============

நாத்திகனாகத்தான் 

இருநதேன்...


கோபுர வாசலில் 

உன்னை 

காணும்வரை !!

=========================

ஊதுவத்தியில் 

ரசாயனம் 

கலக்கிறார்களாம்...


பாவம் 

கடவுள்!!

==========================

கோவில் யானைக்கு 

மதம்

பிடித்தது...


எந்த

மதமென்று 

யாருக்கும் 

தெரியவில்லை!!

======================

கண்ணில்

தெரியாத

ஒன்றை

கடவுள்

என்கிறாய் ...


கண்ணில்

தெரியும்

என் காதலை 

ஏன்

மறுக்கிறாய்!??

==================

இறப்புக்கு பின் 

இறைவன் 

இல்லையென்றால் 

பிரச்சினையில்லை ...


இருந்து 

விட்டால் ...


கடைசி 

பெஞ்சில் 

உட்கார 

வைத்து 

விடுவானோ !!

=================

மனிதன் 

மட்டுமல்ல ...


சில 

ஜாதி 

பூக்களும் 

இன்னமும் 

வெளியேதான் !!

=================

இன்னமும் 

புரியவில்லை ..


நீ 

என் 

பாவமா ...

புண்ணியமா !!

==============

ஒவ்வொரு 

அணுவிலும் 

இருக்கிறானாமே 

இறைவன் ...


எனது 

ஒவ்வொரு 

அணுவிலும் 

அவனா ...

நீயா !

=============

காமத்தின்போது 

தெரியாத 

அருவருப்புகள் 

அவள்

காதலோடு

சமைக்கும் 

உணவில் 

கிடக்கும் 

ஒரு

தலைமுடியில் 

தெரியும்!!

=========================

பட்டாம்பூச்சி

ஒரே ஒரு 
பட்டாம்பூச்சியைத்தான் 
பார்த்தேன் 
தோட்டத்தில் ...

இறக்கை 
கட்டி கொண்டன 
நினைவுகள் !!
==============
இரண்டே 
நிறம் கொண்ட 
மனிதர்களிடையே 
எத்தனை 
நிறவெறி ...

பல வண்ணங்களுடன் 
நிறவெறியை 
உன் இனம் 
எப்படி 
சமாளிக்கிறது 
பட்டாம்பூச்சியே !!

ஒவ்வொருவரும் 
தனி 
இனமோ ?
========
உன்னை 
துரத்தித்தான் 
ஓட
கற்றுக்கொண்டேன் ..

இன்னமும் 
நிற்க 
முடியவில்லை !!
==========
சோம்பேறி 
பிரம்மன் ...

ஒரு 
சிறகினை 
படைத்துவிட்டு 
இன்னொன்றினை 
செராக்ஸ் 
எடுத்து 
விட்டானே !
==============
நினைவுகள் 
உன்னைப்போல 
சுதந்திரமாய் 
பறக்க ...

சிறைப்பட்டு 
கிடக்கிறேன் 
நான் !!
==============
எங்கே 
பிடித்தாய் 
இந்த 
ஏழு வண்ண 
சிறகினை ...?

என் 
நினைவு 
சிறகுகளுக்கு 
எப்போதுமே 
ஒரே வண்ணம்தான் !!
==============
தேடாதே !
எந்த 
பூவிலும் 
காணமாட்டாய் ...

என்னவளின் 
வாசம் !!
==============
உன்னை 
போல அல்ல ...

ஒரே ஒரு 
பூவின் 
நினைவுகளை 
நுகர்வதிலேயே 
சமாதானமாகி 
விடுகிறது 
எனது 
மனது !!
===========
எனது 
கவிதை 
புத்தகத்தையே 
சுற்றி 
வருகிறது 
ஒரு 
பட்டாம்பூச்சி ...

அவளை  
பற்றி 
எழுதியதால் !!
==========
உன்னை 
பார்க்கும்போதெல்லாம் 
தோன்றி 
போகிறது ...

குழந்தையாகவே 
இருந்திருக்கலாம் !!
============
புதிய 
வண்ணங்களை 
பின்னி 
மீண்டும் 
மீண்டும் 
வருவாயா ...

நான் 
புதிது புதிதாய்  
கவிதை 
பின்ன 
வேண்டும்