தையலை நோக்கினான்...
நெற்றிக்கண் நெருப்பு
பனித்துளியானது!
மரங்கள் துளிர்த்தன...
மலர்கள் மலர்ந்தன...
தென்றல் தவழ்ந்தது...
பிரபஞ்சத்தின்
முதல் காதல்
பிறந்தது —
வசந்தமாய்!
உனக்கு
அது
பிடிக்காதோ?
நீ
அமர்ந்ததும்
பூக்கள்ரோஜாவும்
மல்லிகையும்
காதலிக்கின்றனவோ...
நீ
காதல்
தூது
சுமக்கிறாயோ?
பறந்தாடும்
வண்ணத்துப்பூச்சி
உன் சேலை
நிறம் தேடும்!
விடியற்காலை
பனித்துளியும்
உன் சிரிப்பை
கடனாய் கேட்கும்!
வரப்போரம்
நீ நடந்த
பாதச்சுவடும்!
மழை நீரில்
கரையாமல்
மனதை கரைக்கும்!
வயல் காக்கும்
சோளக்காட்டு பொம்மை
என் காதலையும்
மௌனமாய் காக்கும்!
வேலவா முருகா என் வாழ்வின் தீபமே
வெற்றியின் பாதையில் வழிகாட்டும் தெய்வமே
மயில்மேல் வந்தருளும் மலரடி நாயகா
மனமெங்கும் நீயன்றி வேறில்லை முருகா!
ஆறுபடை வீடுகள் அருளொளி வீசுதே
ஆனந்த கீதங்கள் அகமெங்கும் பாடுதே
சூரனை வென்ற உன் சுடர்வேல் காப்பதே
சோதனை வந்தாலும் துணையாக நிற்பதே
பழனி மலைமேல் நீ பசுமையின் அழகாய்
பக்தர்கள் இதயத்தில் பரிவொளி மழையாய்
கழுகுமலை காற்றிலும் உன் நாமம் இசையாய்
கண்ணீரைத் துடைத்திடும் கருணையின் நிழலாய்
கந்தனே குமரனே கற்பக மரமாய்
கைதூக்கி வேண்டினால் கனவுகள் நனவாய்
செந்தமிழ் பாடலின் செழுமையாய் மலர்ந்து
சிந்தையில் என்றும் நீ சிரித்திடும் நிலவாய்
திருச்செந்தூர் அலைகளில் திருநாமம் ஒலிக்க
திருப்பரங்குன்றத்தில் தேவர்கள் துதிக்க
பழமுதிர்சோலையில் பறவைகள் இசைக்க
பக்தியின் பாதையில் பாவங்கள் கரைய
வள்ளியும் தெய்வானையும் அருகினில் கொண்டு
வானவர் போற்றிடும் வடிவழகோடு நின்று
வெள்ளியெனத் தூய மனம் வேண்டுவோர்க்கெல்லாம்
வேலொளியாய் வந்தருளும் வெற்றிவேல் முருகா! 🎶🙏🏻
நதியோரம் மணல்வெளியில்
நாணலாய் நீ நடக்கையிலே
உன் பாதம் பட்ட இடமெல்லாம்
சின்னச் சின்ன பூக்களாக
மனசுக்குள்ள மலருதடி!
தென்றலோடு வந்த நிலா
தேடி உன்னைப் பாக்கையிலே
நிலவுக்கே வந்த மயக்கம்
என் விழிக்கும் வந்ததாலே
மனசெல்லாம் காதலடி!