Monday, December 30, 2024

தென்றல்

சற்றே 
வெட்கத்துடன் 
வீசுகிறது 
தென்றல் ...
உன்னை 
தழுவி 
வந்ததோ !!
================================
தென்றலே 
கொஞ்சம் 
கேட்டு சொல்லேன் ...
பட்டாம் பூச்சி 
மலரின் காதில்  
சொன்ன 
கவிதையை !
=================================
பொன்வண்டாய் 
பிறக்கிறேன்  ...
சிறு பிள்ளை 
விளையாட்டாய் 
தீப்பெட்டியிலாவது 
சிறையெடுத்துவிடு !!
================================
அழகாகத்தான் 
இருக்கிறது ...
உன்னை நினைத்து 
எழுதிய கவிதையும்..
காதலிக்க 
தொடங்கிவிட்டேன் ...
அந்த 
கவிதையையும் !!
=======================
நிலவு 
வீணை 
மீட்டினால் 
நான் 
எதை 
ரசிப்பது !!
========================
மறக்கத்தானே 
சொன்னாய் ...
எனக்கென்னவோ 
ற வுக்கு பதில் 
ரி யே 
ஒலித்துக்கொண்டிருக்கிறது !!
இரண்டும் 
ஒன்றுதானே !!
========================
கண் விழிக்கவே 
பிடிப்பதில்லை ...
கனவில்தான் 
நீ 
ஏதேதோ 
கதைக்கின்றாயே !!
=========================
புயல்
என்ன செய்து விடும் !!?
தென்றலல்லவா 
எதையெல்லாமோ 
கவர்ந்து 
போகிறது !!
=========================
ஒவ்வொரு 
கவிதைக்கு 
முன்னும் 
பின்னும் 
மாத்திரையாய் 
போட்டு கொள்கிறேன் ...
உனது 
நினைவுகளை !!
=========================
உன் 
மௌனம் கூட 
பிரளயத்தை 
பிரசவிக்கிறது 
என் இதயத்தில் ...
என் 
சொல்லாவது 
அசைக்கிறதா 
உன் 
இதயத்தை !!
========================