Sunday, December 3, 2023

கோபுரத்தருகே

எப்போதும் 

தலைகுனிந்தே 

நடக்கும் 

உன் 

முகம் காண 

காத்திருக்கிறேன் 

கோபுரத்தருகே ...


நிமிர்ந்து 

பார்த்து

கும்பிடாமலா

போய் 

விடுவாய் !!

====≈============

நாத்திகனாகத்தான் 

இருநதேன்...


கோபுர வாசலில் 

உன்னை 

காணும்வரை !!

=========================

ஊதுவத்தியில் 

ரசாயனம் 

கலக்கிறார்களாம்...


பாவம் 

கடவுள்!!

==========================

கோவில் யானைக்கு 

மதம்

பிடித்தது...


எந்த

மதமென்று 

யாருக்கும் 

தெரியவில்லை!!

======================

கண்ணில்

தெரியாத

ஒன்றை

கடவுள்

என்கிறாய் ...


கண்ணில்

தெரியும்

என் காதலை 

ஏன்

மறுக்கிறாய்!??

==================

இறப்புக்கு பின் 

இறைவன் 

இல்லையென்றால் 

பிரச்சினையில்லை ...


இருந்து 

விட்டால் ...


கடைசி 

பெஞ்சில் 

உட்கார 

வைத்து 

விடுவானோ !!

=================

மனிதன் 

மட்டுமல்ல ...


சில 

ஜாதி 

பூக்களும் 

இன்னமும் 

வெளியேதான் !!

=================

இன்னமும் 

புரியவில்லை ..


நீ 

என் 

பாவமா ...

புண்ணியமா !!

==============

ஒவ்வொரு 

அணுவிலும் 

இருக்கிறானாமே 

இறைவன் ...


எனது 

ஒவ்வொரு 

அணுவிலும் 

அவனா ...

நீயா !

=============

காமத்தின்போது 

தெரியாத 

அருவருப்புகள் 

அவள்

காதலோடு

சமைக்கும் 

உணவில் 

கிடக்கும் 

ஒரு

தலைமுடியில் 

தெரியும்!!

=========================

பட்டாம்பூச்சி

ஒரே ஒரு 
பட்டாம்பூச்சியைத்தான் 
பார்த்தேன் 
தோட்டத்தில் ...

இறக்கை 
கட்டி கொண்டன 
நினைவுகள் !!
==============
இரண்டே 
நிறம் கொண்ட 
மனிதர்களிடையே 
எத்தனை 
நிறவெறி ...

பல வண்ணங்களுடன் 
நிறவெறியை 
உன் இனம் 
எப்படி 
சமாளிக்கிறது 
பட்டாம்பூச்சியே !!

ஒவ்வொருவரும் 
தனி 
இனமோ ?
========
உன்னை 
துரத்தித்தான் 
ஓட
கற்றுக்கொண்டேன் ..

இன்னமும் 
நிற்க 
முடியவில்லை !!
==========
சோம்பேறி 
பிரம்மன் ...

ஒரு 
சிறகினை 
படைத்துவிட்டு 
இன்னொன்றினை 
செராக்ஸ் 
எடுத்து 
விட்டானே !
==============
நினைவுகள் 
உன்னைப்போல 
சுதந்திரமாய் 
பறக்க ...

சிறைப்பட்டு 
கிடக்கிறேன் 
நான் !!
==============
எங்கே 
பிடித்தாய் 
இந்த 
ஏழு வண்ண 
சிறகினை ...?

என் 
நினைவு 
சிறகுகளுக்கு 
எப்போதுமே 
ஒரே வண்ணம்தான் !!
==============
தேடாதே !
எந்த 
பூவிலும் 
காணமாட்டாய் ...

என்னவளின் 
வாசம் !!
==============
உன்னை 
போல அல்ல ...

ஒரே ஒரு 
பூவின் 
நினைவுகளை 
நுகர்வதிலேயே 
சமாதானமாகி 
விடுகிறது 
எனது 
மனது !!
===========
எனது 
கவிதை 
புத்தகத்தையே 
சுற்றி 
வருகிறது 
ஒரு 
பட்டாம்பூச்சி ...

அவளை  
பற்றி 
எழுதியதால் !!
==========
உன்னை 
பார்க்கும்போதெல்லாம் 
தோன்றி 
போகிறது ...

குழந்தையாகவே 
இருந்திருக்கலாம் !!
============
புதிய 
வண்ணங்களை 
பின்னி 
மீண்டும் 
மீண்டும் 
வருவாயா ...

நான் 
புதிது புதிதாய்  
கவிதை 
பின்ன 
வேண்டும் 

Monday, November 20, 2023

பூக்காரி

1

பூக்களை
விற்பதாய்
நினைக்கிறார்கள்...

நடந்து செல்லும்
ஓர் ஓவியத்தை
யார்
விலை பேச முடியும்?


2

வாசமற்ற
உன் வாழ்வுக்காகத்தான்...

வாசம் நிறைந்த
மலர்களை
விற்றுக்கொண்டிருக்கிறாயோ?


3

பூவொன்று
பூவேந்தி
நிற்கிறதால்தானோ...

இந்த உலகையே
பூவுலகம்
என்று அழைக்கிறார்கள்!


4

எதை
விற்கிறாய்?

பூக்களையா...

இல்லை...

பூக்களைவிட
அழகாகப் பூத்த
புன்னகையையா?


5

"ரோஜா"
என்று சொல்லி...

வேறெதையோ
நீட்டுகிறாயே!

அதை
எந்தப் பெயரில்
வாங்கிக்கொள்வது?


6

"தாமரை இல்லை"
என்று
பொய் சொல்கிறாய்...

அந்தப் பொய்யையே
உன்
தாமரை இதழ்கள்
காட்டிக்கொடுக்கின்றன!


7

கூடையிலுள்ள
பூக்களை...

வண்டுகள்
மொய்க்கவில்லை.

பூக்களுக்கே
பூவாக
நீ
நிற்கும்போது!


8

உன்னைவிட்டு
பிரிந்துவிட்டால்...

கூடையிலுள்ள
பூக்கள்கூட
வாடிவிடாதா?


9

கடந்து செல்கின்றன...

எத்தனையோ
அந்திமாலைகள்.

ஆனால்...

நீ
காத்திருக்கும்
மாலை மட்டும்
இன்னும் வரவில்லை!


10

கையில்
பூக்களுடன்...

எந்த
மாலைக்காக
காத்திருக்கிறாய்?

பூக்கள்
வாங்க வரும்
மாலையா...

உன்
வாழ்வை
மாற்ற வரும்
மாலையா?


11

மாலை வந்தால்
பூக்கள்
வாடிவிடுமோ
என்று
அஞ்சாதே!

மாலையை
எனக்குத்
தொடுத்துவிடு...

அந்த
மாலையோடு
மகிழ்ச்சியாய்
ஏற்றுக்கொள்கிறேன்...

உன்னையும்.

Friday, November 3, 2023

கண்ணன்

கோதை மலர்களை தந்தாள் ...

சபரி கனிகளை  தந்தாள் ...

மீரா இசையை  தந்தாள் ...

குசேலன் அவலை தந்தான் ...

கர்ணன் புண்ணியத்தை தந்தான் 

என்னிடம் 

என்ன

எதிர்பார்க்கிறாய்  !!?

=================================

உறவுப்பாலத்தை

சொல்லெனும் 

குண்டால் 

தகர்ப்பதும்

காதல் 

பயங்கரவாதம்தான் !!

=================================

பார்வை நேரத்தில் 

மருத்துவர்கள் 

நோய் தீர்க்க 

முனைகிறார்கள் ...


உனது 

பார்வை 

நேரத்தில்தான் 

எனக்குள் 

நோயையே 

'விதைக்கிறாய் !

=================================

எனது 
கவிதை 
புத்தகத்தில் ...
எழுதப்பட்ட 
சில பக்கங்கள் ..
வரையப்பட்ட 
சில பக்கங்கள் ..
வண்ணமயமான 
சில பக்கங்கள் ..
கிறுக்கப்பட்ட 
சில பக்கங்கள் ..
கிழிக்கப்பட்ட 
சில பக்கங்கள் ..

நீ 
எந்த பக்கம்?

=================================


Thursday, October 12, 2023

ஜிமிக்கி

காதோர கூந்தலை 

ஒவ்வொரு முறை 

நீ 

சரி செய்யும்போதும் 

ஏங்கிப் போகிறது 

ஜிமிக்கி ...

தன் மீது 

உன் 

விரல் 

படாதா என்று !

========================

உன் 

ஜிமிக்கியை 

ரசிக்கவே 

நேரம் 

போதவில்லை 

எனக்கு ...

கற்பனை 

செய்து 

வந்ததையெல்லாம் 

எப்போது 

பேசுவது !

========================

கேட்டுச்சொல் 

உன் 

காது ஜிமிக்கியிடம் ...

என்னோடு 

போட்டிக்கு 

தயாரா என்று ...

பார்த்துவிடுவோம் ...

உன் கன்னத்தில் 

அதிகம் 

முத்தமிடுவது

யாரென்று !!

========================

நீ 

சொல்வதற்கெல்லாம் 

என்னைவிட 

அதிகமாய் 

தலையாட்டுகிறதே 

ஜிமிக்கி ...

என்னை விட 

உன்னை

அதிகம் 

காதலிக்கிறதோ!!

========================

நீ 

கண்ணாடி 

பார்க்கும்போதெல்லாம் 

அப்பாவியாய்

கர்வப்பட்டு 

கொள்கிறது ...

ஜிமிக்கி ...

தன்னால்தான் 

நீ 

அழகென்று !!

========================

என் 

கவிதை 

மழையை 

தடுத்து 

விடுகிறதோ ...

உன் 

ஜிமிக்கி 

குடை !

========================

கொல்லன் 

உலையிலும் 

ஜிமிக்கி 

ஏன் 

கலங்கவில்லை 

என்று 

புரிகிறது ...

உன் காதோரம் 

அது 

ஊஞ்சலாடும்போது !

========================

சேதாரம் 

குறைவென்று 

நீ வாங்கி 

மாட்டிக்கொண்ட 

ஜிமிக்கியால் 

சேதாரம் 

அதிகம்தான் ...

பல 

இதயங்களுக்கு !

========================

கொஞ்சம் 

இறக்கிவிடு 

உன் 

ஜிமிக்கியில் 

சிக்கிக்கொண்ட 

என் 

கவிதைகளை !ர



மழை நனைக்கும் மங்கை

வாழையிலை குடை பிடித்து 
தளிர்  நடை நீ போடையிலே !

சாரல் மழையின் கானத்துக்கு 
கொலுசு தாளம் போடையிலே !

நடுங்க வைக்கும் இடியோசைக்கு 
கருவிழி கரகம் ஆடையிலே !

மயக்கும் உன் புன்னகைக்கு 
மின்னலும் கண் மூடையிலே !

சாரல் மழையும் காதல் கொண்டு 
உன் எழில் காண ஏங்கிடுமோ !

வெட்கம் விட்டு சிறு மழையும் 
புயல் மழையாய் ஓங்கிடுமோ !

மேகத் துணியைப்
போர்த்திக் கொண்டு
மெல்ல மெல்ல
நீ நடக்கையிலே!

மண் வாசனையும்
உன் பாதம் தொட்டு
மலர்வாசமாய்
மாறிடுதே!

துளி துளியாய்
உன்மேல் விழும் மழை
முத்தம் கேட்கும்
குழந்தையோ!

காற்றும் கூட
உன் கூந்தலோடு
காதல் பேசும்
கவிஞனோ!

உன் விழி சிந்தும்
ஒரு மின்னலிலே
வானத்தின் மின்னல்
வெட்கம் கொள்ளுதோ!

உன் இதழ் சிந்தும்
சிறு சிரிப்பினிலே
வானவில் கூட
நிறம் மறந்ததோ!

உன்னை நனைக்க
வந்த மழைக்கே
உன்மேல் காதல்
வந்ததோ !

அதனால்தானோ
சாரல் எல்லாம்
அடங்க மறுத்துப்
பெருமழையாய் 
பெய்கிறதோ!

அவன்

~
நான் வெறும் கால்களில் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது,
அவன் ஷூ அணிந்து கொண்டு பள்ளி வேனில் இருந்து எனக்கு டாட்டா காட்டியவன்..

நான் தென்னை மட்டையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது,
அவன் புதிதாய் வாங்கிய MRF கிரிக்கெட் மட்டையுடன் உலா வந்தவன்..

நான் என் சைக்கிளுக்கு காற்றடிக்க காசில்லாமல் அலைந்த போது,
என் முன்னால் புதிய Bike க்குடன் 
வந்து நின்றவன்..

நான் எழுத்துக்கூட்டி தமிழ் படித்து கொண்டிருந்தபோது,
அவன் கவிதைகளை எழுதியவன்..

நான் ஒரு பெண்ணிடம் காதலை சொல்லத் திணறிக் கொண்டிருந்த போது,
பல பெண்களால் ஒரு தலையாய் காதலிக்கப் பட்டுக் கொண்டிருந்தவன்..

நான் கையேந்தி பவனில் சாப்பிட்டு கை கழுவிக் கொண்டிருக்கும் பொழுது,
அவன் எதிரே இருந்த சரவண பவனில் இருந்து எனக்கு கையசத்தவன்..

நான் வீட்டுக் கடனுக்காக வங்கியில் காத்துக் கொண்டிருந்த போது,
அவன் கை நிறைய பணக் கட்டுகளை Deposit செய்து கொண்டிருந்தவன்..

நான் விடுமுறைக்கு என் ஊருக்கு
Train ஏறிய போது, 
அவன் Vocation க்காக வெளிநாட்டுக்கு Flight பிடித்துக் கொண்டிருந்தவன்..

..........

அவன் வேறு யாரும் அல்ல..

நான் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று நான் கண்ட கனவுகளின் 
விம்பம் அவன்..

இதுவரை இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது வாழ்க்கை..

என்றோ ஒரு நாள் இருவரும் 
ஒரு புள்ளியில் சந்திப்போம் என்ற 
அதீத நம்பிக்கையில்..

அன்று வரை,

நானும் அவனும் தினமும் கனவில் நிறைவேறாத ஆசைகளைப் பற்றி 
கதை பேசிக் கொள்வோம்..

📌 அந்த உரையாடல் போதும் எனக்கு...
Copy paste

Wednesday, October 4, 2023

காத்தோட பறக்குதடி

 வெட்ட வெளி காட்டுல 

பொட்ட வெயில் பாராம 

நட்டு வச்ச நாத்தெல்லாம் 

கொட்டும் ;மழையில் அவியுதடி !


வியர்வை நீரை சிந்தி சிந்தி 

பயிரை வைத்து காத்திருந்தா 

தண்ணீரை கொட்டும் வானம் 

கண்ணீரையும் கேட்குதடி !


கொத்து கொத்தா வெளஞ்சதெல்லாம் 

சேத்துல சாஞ்சு கெடக்கயிலே

சேத்து வச்ச கனவெல்லாம் 

காத்தோட பறக்குதடி !!


Sunday, September 24, 2023

"அமுத" கானங்கள்

 உன் 

நினைவுகளை 

தூண்டி 

தூங்க விடாமல் 

"கொல்லும்"

பாடல்களை 

"அமுத" கானங்கள் 

என்ற பெயரில் 

ஒலிபரப்பி 

கொண்டிருக்கிறது 

சென்னை 

வானொலி !

========================

நல்லதை 

நினை

நல்லதே

நடக்கும் 

என்றார்கள் ...

அதனால்தானே 

நினைத்தேன்

உன்னை...!!

========================

மனம் என்ற 

browser ல்  

ஆயிரம் tab கள்  

திறந்திருக்கின்றன ...

சில tab கள் 

hang ஆகி விட்டன ...

அந்த 

இசை மட்டும் 

எந்த tab ல் 

கேட்கிறதென்று 

தெரியவில்லை !!

========================

மூன்று வயதில் 

பொம்மை 

உடைந்ததற்கே 

அழுது புரண்ட 

நான் ..

இன்று 

அமைதியாகவே 

இருக்கிறேன் ..

ஏதேதோ 

இழந்த 

பின்பும் !!

========================

படகானால்

ஒரு நாள் 

கரை சேர 

வேண்டுமே ...

அதனால் 

ஆகி விட்டேன் 

மீனாய் !!!

========================

வேப்பெண்ணை  

வார்த்தைகளை 

தேன் கலந்து 

விற்று விட்டு 

போய் விட்டாய் !


தேனான வாழ்க்கை 

வேப்பெண்ணை 

ஆகி விட்டது 

எனக்கு !

========================

அடித்திருந்தால் கூட 

வலித்திருக்காது...

நடித்திருந்தாய்....

வலிக்கிறது!!

========================

மறுத்துச் சொன்னாலும் 

சிரித்துச் சொல்...

அந்த சிரிப்பில் 

மறக்க முயற்ச்சிக்கிறேன் 

மறுப்பின் வலியை !!

========================

எனக்கு 

ஏன்

உன்னை பிடித்தது 

என்று தெரியவில்லை...

கொஞ்சம் 

கேட்டு 

சொல்லேன்..

என் 

இதயத்திடம்.  !!

========================

கும்பிட்டால் 

முக்தி தருவேன் 

போர்டு  வைத்தார் 

கடவுள் ...

கண்டு கொள்ளவில்லை 

யாரும்...

கும்பிட்டால் 

பணம் கொட்டும் 

என்று

மாற்றினார் போர்டை...

அலைமோதியது 

கூட்டம்!!

========================

அளவில்லா 

அன்பை காட்டி 

மயக்கி விட்டாய் 

சிவனை ...

உன்னோடு

ஒப்பிட்டு 

என்னை

அரக்கன்

என்கிறான்

அவன் !!!

========================

காலையில் 

இரண்டு நிமிடங்கள் 

மட்டும் 

கடவுளுக்கு ஒதுக்கி 

வேண்டிக் கொண்டேன் ..

ஒவ்வொரு வினாடியும் 

என்னோடு இருந்து 

காத்துவிடு ...

========================

உன்

இதயச்சிறையில் 

இருப்பதைவிட 

வேறென்ன 

சுதந்திரம் 

வேண்டும் 

எனக்கு!!

========================

உன்னை 

வர்ணித்து 

நான்

அயர்ந்தாலும் ..

அயராது 

போலிருக்கிறதே 

தமிழ்!!

========================

அறிவியல் 

அறிந்து 

சொல்லுமோ...

உன் 

விழி ஈர்ப்பு 

சக்தியை!!

========================

உன் 

கருவிழி மையால் 

இதழ் வரி போட்டு 

என் 

இதய பக்கங்களில் 

எதையெதையோ 

நீதான் 

கிறுக்குகிறாய் ..

கவிதை 

என்ற 

பெயரில் !

Saturday, August 26, 2023

வயல்

வயல்வெளியில்
கைகோர்த்து
நீ சொன்ன சொல்லும்

தினம் தினம்
வழி நடக்கையில்
மௌனமாய் கொல்லும் 

தழுவிப்போகும் 
தென்றலும் 
நெஞ்சின் 
சூடேந்தி செல்லும் 

ஓங்கி நிற்கும்
ஒற்றைப்பனை 
நெஞ்சுருக 
சாட்சி சொல்லும் 

Monday, August 7, 2023

நிலாமகளை

 வெண்ணிற போர்வை 

ஒன்று  

வானில் மிதந்து செல்ல 

நிலாமகளை 

அது 

மூட பாக்குது மெல்ல !


தென்றல்  

காதில்

சொன்னது சேதி 

நீ 

மல்லிகை 

பூவின் ஜாதி !


நீ 

பகையானபோது 

உறவாகிப்போனது 

தென்றலும் 

கடலும் 

நிலவும் !!

Tuesday, July 25, 2023

கவிதை காற்று

 மூங்கிலுக்குள் 

நுழைந்தால்தான் 

காற்று 

இசையாகிறது ...


ஆனால் ...

உன்னை 

தொட்டாலே 

தென்றலாகி 

விடுகிறதே !!!

================

குறுஞ்சிரிப்பாலும் 

ஓரவிழி 

பார்வையாலும் 

என் மீது 

அடிக்கடி 

ரெய்டு நடத்துவது 

உனது 

காதலாக்க 

துறைதானே !!!

===================

 அளவுக்கு 

அதிகமாக 

உன் அன்பை

சேர்த்து விட்டேனோ ...


வரியாக

கேட்கிறதே

வாழ்க்கையை...

=======================


Wednesday, July 19, 2023

காதல் நகைகள் - கொலுசு


இசைக்கருவிகளின் 

வரிசையில் 

சேர்த்துவிட்டார்களா 

உனது 

கால் 

கொலுசை !!!

 

உனது

கல்லீரல் 

மண்ணீரல் 

பித்தப்பை 

கர்ப்பப்பை 

இவற்றின் 

செயல் திறனை 

கூட்டுகிறதா ...

இல்லை

எனது 

இதயத்தின் 

செயல்திறனை 

சோதிக்கிறதா !!!


காலில் 

மருதாணியை 

நீ 

போட்டு கொண்டாயா ...

இல்லை 

உனது 

பாதம் தழுவிய 

வெட்கத்தில் 

கொலுசு 

பூசி விட்டதா !!


நீ 

பேசுவதெல்லாம் 

பாடல் 

என்று நினைத்து 

ஜதி 

சொல்லிக் 

கொண்டிருக்கிறது 

உனது 

கொலுசு !


உனது 

கணுக்கால் 

அசைவின் 

கொலுசு 

இசைக்கு 

நடனமாடி 

களிக்கிறது 

காதோரம் 

கம்மல் !!


நீயும் 

நானும் 

ரகசியமாகத்தானே 

பேசுகிறோம் ..

எனக்கும் 

கேட்கிறதென 

பரிகசிக்கிறது 

உனது 

கொலுசொலி !!


காலில்தானே 

கிடக்கிறது ...

இருந்தும் 

என்ன 

கர்வம் பார் ...

அரசியின் 

கிரீடத்தில் 

ஜொலிப்பதை 

போல !! 


நீ 

நிலத்தில் 

கால் 

வைக்கும்போதெல்லாம் 

அஞ்சி 

சிணுங்குகிறது 

கொலுசு ...

உனது 

பாதத்திற்கு 

வலிக்குமோ என !!


நகைகளை தானே 

கொள்ளை 

அடிப்பார்கள் ...

என்னை 

கொள்ளை 

அடிக்கிறதே 

உனது 

நகைகள் !!


எப்போது 

விடுவிப்பாய் 

உனது கொலுசு 

மணிகளுக்கிடையில் 

சிக்கி 

தவிக்கும் 

எனது 

கவிதை 

வரிகளை !!

Friday, June 23, 2023

கொஞ்சல்

எத்தனையோ
வார்த்தைகள் சொல்லி
உன்னை கொஞ்சிய பிறகும்
சமாதானமாகபவில்லை 
மனது ....
இன்னமும் 
ஏதோ ஒரு
வார்த்தை 
மிச்சமிருப்பதாக 
தவித்து 
போகிறது 

Friday, June 9, 2023

வாசம் கெட்டு

 பூவென்று 

அழைத்து

மோசம் 

செய்து  

போய்விட்டாய் ....

உன் 

நேசம் இன்றி 

வாசம் கெட்டு  

தவிக்கிறது 

இந்த பூ !!!


புரையோடிய 

கண்களாலும் 

திரை போட்டு 

மறைக்க 

முடியவில்லை ...

உனது 

பிம்பத்தை !!


இன்னமும் 

சந்தேகம் 

தீரவில்லை ...

ஏறிக்கொண்டிருப்பது 

பிளட் பிரஷரா ...

காதல் பிரஷரா ...


ஆயிரம் 

வழிகள்  ...

இருந்தும் ...

உனது 

இதயத்தின் 

நிழலில் 

மட்டுமே 

இதம் 

காண்கிறது 

எனது 

காதல் !!


நீ 

காதலை 

சொல்லிய 

அப்பொழுதே  

உலகமே 

உறைந்திருக்காதா 

என் 

ஏங்கி போகிறேன் 

இப்பொழுது  !!


நீ 

சென்று கொண்டே 

இருக்கிறாய் ...

உனது 

நினைவுகள் 

வந்து கொண்டே 

இருக்கிறது  ...

இது 

மன்மதனின் 

ரிலேட்டிவிட்டி 

தியரியோ !!


யோசித்து 

எழுதவில்லை ...

நேசித்து 

எழுதுகிறேன் ...

உன்னையே 

சுவாசித்து 

கொண்டிருப்பதால் !!


நமது  

நேற்றைய 

கனவுகள் 

எனது

இன்றைய 

தேவைகள் 

ஆனபோது ...

உனக்கு 

மட்டும் 

எப்படி 

அவை  

நினைவுகள் 

ஆயின !!!



யார் சொன்னது 

உன்னை 

மறக்க 

முடியாதென ...

நிச்சயம் 

ஒரு நாள் 

உன்னை 

மறந்திருப்பேன் ...

அந்நாளில் 

இவ்வுலகை 

பிரிந்திருப்பேன் !!!


கடமையை 

செய் ...

பலனை 

எதிர்பாராதே 

என 

கண்ணன் 

கீதையில் 

சொன்னது 

எனது 

காதலுக்காகத்தானோ !!


ஒரு வழிப்பாதை 

என்று 

அறியாமல் 

நுழைந்து விட்டேன் 

காதல் வழி 

பாதையில் ...

உனக்கு தெரிந்த 

திரும்பும் வழியை 

சொல்லி விட்டாவது 

போ !!!


கனவு 

கோர்க்குது 

கண்களில் ...

நினைவு 

கோர்க்குது 

நெஞ்சத்தில் ...

ஒரு முறை 

கோர்த்துவிடு 

உனது 

காதலை !!


உனது 

பார்வை 

மழையில் 

நனைந்து 

பிடித்து கொண்டது 

காதல் தோஷம் ...

வந்து விடு 

நேச மருந்தோடு !!


நேரில் பார்க்கையில் 

காதலில் 

கஞ்சத்தனம் 

காட்டினாலும் ...

எனது 

கனவுகளில் 

காதல் வள்ளலாகவே 

இருக்கிறாய் !!


மன்மதனின் 

ஐந்து 

அம்புகளும் 

தோற்று 

போகின்றன 

உனது 

ஒரே ஒரு 

விழி அம்பில் !!


என்னை 

சுற்றி 

மின்மினி பூச்சிகளாய் 

பறக்கும் 

உனது 

எண்ணங்களின் 

வெளிச்சத்திலேயே 

குளிர் காய்ந்து 

விடுகிறது 

எனது 

காதல் !!


உன்னை 

காணும் நேரம் 

அமிர்த 

யோகமாகவும் 

உன்னை 

காணாத நேரம் 

எம கண்டமாயும் 

தெரிகிறது 

எனது 

தின பலன்களில் !!


நீரின்றி 

அமையாது 

உலகு ...

இது 

வள்ளுவன் வாக்கு ...


நீயின்றி 

அமையாது 

என் உலகு ...

இது 

என் வாக்கு !!


உனது 

நினைவுகளை  

போர்த்திக்கொண்டு 

குளிர் 

காய்ந்து விடுகிறது 

எனது மனம் ...

உனது நினைவுகள் 

சூடாகவே 

இருப்பதால் !




Saturday, June 3, 2023

அனல்

உனது
காதல் சிக்னலில் 
என்ன கோளாறு....
தடம் புரண்டு 
தவிக்கிறதே 
எனது 
வாழ்க்கை ரயில் ....
==÷==÷=÷=÷=÷=====₹₹₹₹₹₹₹₹₹₹
உனது பார்வை
வீசியதென்னவோ 
பனிக்கட்டிகளைத்தான் 
ஆனால்...
எனக்குள் 
பற்றிக்கொண்டது 
அனல்...
=====%%%%%%₹%%%%%%%%

இன்று நீ
மௌன விரதம் இருப்பது 
உன்
விழிகளுக்கு தெரியாதா  ...
என்னோடு 
கதைக்கிறதே....
=================//////////////%%
கீழடி
கல்வெட்டுகளைக்கூட
படித்து விடலாம்...
உன் 
விழியடி 
சொல் மெட்டுகளுக்கு 
என்ன பொருள் ...!!
====÷===÷=////₹=÷÷##₹₹%%%^%%%
எந்த கோர்ட்டில் 
தண்டனை
வாங்கிக் கொடுப்பது ....
தென்றல் 
உன் மேனியில்
நடத்தும் 
பாலியல் சீண்டல்களுக்கு....
==÷××==/__&<>><_=÷=/%/_^^^^^^^^^
உனது
முத்த மழையில் நனைந்தது
எனது 
கன்னங்கள்தானே....
எப்படி 
காய்ச்சல் வந்தது 
எனது 
இதயத்திற்கு....
%%₹₹=====₹₹=====%%==%%%%%%%

இறந்த காலத்தின் 
உன் நினைவுகள் 
நிகழ் காலத்திலும் 
என்னோடு பயணித்து 
கேள்விக்குறி ஆக்கி
விட்டதே 
எதிர் காலத்தை 
========/////__<<>[[*_/₹##÷₹%%
உனது
நினைவுகள்
24 மணி நேரத்தில் 
மாயமாகி விடாதா ...
இந்த
வாட்ஸ்அப் 
ஸ்டேட்டஸ்  போல ....
====₹%%/==============₹₹₹₹₹
எந்த
கேள்வி கேட்டாலும் 
உன் பெயரையே 
விடையாக தருகிறதே 
எனது இதயத்தின் 
ChatGPT....
Bug  ஆ 
அல்லது 
டிசைனே அப்படித்தானா...
₹####₹₹%%₹=================
ஒரு பக்க
கதையாய் 
நீ
வந்து போய்விட்டாய் ....
உன்னை வைத்து 
தொடர்கதையே 
எழுதிக்கொண்டிருக்கிறது 
எனது
இதய ஏடு 
===========₹==₹₹₹=₹%%%%%%%%%%%%%%%%



Friday, May 26, 2023

யார் பித்தன

 நாகங்களை 

அணிந்து 

பித்தனென்று 

பிதற்றி 

திரிபவனே !!


ஒரு முறை 

அணிந்து பார் ...'

எனது 

சோகங்களை ...


புரிந்து கொள்வாய் 

யார் 

பெரும் பித்தனென்று !!

≈==============================

நூறு 

முத்தங்களை தந்து விட்டு 

எந்த முத்தம் 

இனிமை என்று கேட்கிறாய் ...


தேனில்  

எந்த துளி 

இனிமை 

என்று சொல்வேன் !!

Friday, May 12, 2023

ஆடை

ஆடை திருத்தி நின்றாள் 
அவள்தான் 
என் 
ஆயுளை திருத்தி சென்றாள் 

≈================$$$$$$$$$$$
தென்றல் நடந்தது மெல்ல 
நெஞ்சில் கனவுகள் கிள்ள 

Wednesday, April 26, 2023

வினாடி கதைகள்

பேருந்து நிலையப் பயணத்துக்கான 
வாடகை வாகனம் ஓட்டி வந்தவர்
விக்ரஹ ஆராதனையை விரும்பாதவராகவே இருந்தார்

பார்த்துப் பார்த்து பதிவு செய்த
நீண்ட தூரப் பயணப் பேருந்து ஓட்டுநரின் கழுத்தில் 
மின்னிக் கொண்டிருந்தது கொலைக் கருவி

குல தெய்வக் கோவிலுக்கு அருகிலிருந்த 
சிறு நகரப் பேருந்து நிலைய நுழைவாசலில்
திரும்பிச் செல் என்பதுபோல் கைகாட்டி நின்றது 
போலி நாத்திகனின் புதிய சிலை

குளித்துப் புத்தாடை அணிந்து புறப்படத் தங்கிய விடுதி
அமைந்திருந்தது ஆலயத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில்

மலைக்கோவிலுக்கு இட்டுச் சென்ற ஆட்டோவில்
மதத்தை அபினாக மிதித்தவனின்  ரத்த முக ஸ்டிக்கர்

ஓய்வு நாளானதால் வழி நெடுக 
உரித்துத்தொங்கவிடப்பட்டிருந்தன
உன்னை நம்பி வலம் வந்த உயிரினங்கள்

பூ கட்டி, பழம் விற்று, செருப்புக்குக் காவல் இருந்தவரின் 
பைக்கில் பொன் நிறத்தில் மின்னுகிறது புரியாத எழுத்து

மலை உச்சியில் நின்று பார்த்தபோது
ஆலயத்துக்குச் சொந்தமான
விற்று முடிக்காத விளை நில பிளாட்களின்
கம்பி வேலிக்கு வெளியே கழுத்து மணி அசைய 
தொண்ட வறளச் சுற்றிக்கொண்டிருந்தன காவிப் பசுக்கள்

அர்ச்சகருக்குக் கொடுத்த ஐநூறு ரூபாய்
பிரகாரம் சுற்றி வருவதற்குள் இடம் மாறியிருந்தது
அர்ச்சனைச் சீட்டு கிழித்துக் கொடுத்த அற நிலையத்துறையானுக்கு

கருவறை முன் கை கூப்பி நின்றபோது 
மனதில் எழுந்தது ஒரு கேள்வி:
உன் மேல் பக்தியே கொள்ளாதவருக்கும்
என்(எம்) ஒற்றை குல தெய்வப் பயணம் மூலமும்
இத்தனை இகலோக அருள்பாலிக்கிறாயே எம் பகவானே
உன் பக்தர்களுக்கும் கொஞ்சம் 
ஓரக்கடைக்கண் காட்டக்கூடாதா?

பசியால் வாடும் உன் ஆவினங்களுக்கு
எட்டாத இடத்தில்தான் முளைக்கவேண்டுமா
உன் இறுதிப் பசும்புல் வெளி?

இதுவும் பறிபோனபின் எங்குதான் மேயும் 
உன் திருக்கோவில் ஊரையே சுற்றிச் சுற்றிவரும் 
உள் நாட்டுப் பசுக்கள்?

என் சிறு குடத்தில் முகர்ந்து வரும் நன்னீரை
உன் மலைக்கோவில் நந்தவனத்துக்கு
ஒரு சொட்டுகூட மிஞ்சாமல்
எத்தனை கரங்கள் வழிப்பறிக்கின்றன?

வேறு மதப் பயண வழிகள் எதுவுமே
இப்படி விபரீதமாகியிருக்கவில்லையே

அர்ச்சகரின் தட்டில் 
அரையணா போட
எத்தனை தசமபாக டோல்கேட்கள்
எத்தனை சதகாக், ஜெசியாக்கள்
எத்தனை தகர உண்டியல்கள் 
எத்தனை கப்பம் கட்ட வேண்டியிருக்கிறது?

இறுதி இலக்கான உன் சன்னதி மட்டுமல்ல
அதை நோக்கி இட்டுவரும் பாதையும் தரவேண்டாமா 
இனிய புனித யாத்திரை அனுபவத்தை.

இட்டுவரும் பயணச் சங்கிலியின் 
அத்தனை கண்ணியும் அறுந்தாலும் / அறுத்தாலும்
கிடைப்பதைக் கொண்டு திருப்திப்படும் எளிய பக்தன்
உருண்டு புரண்டாவது உன் நாமம் ஜெபித்தபடி
உன் வாசலுக்கு வந்துகொண்டுதான் இருப்பான்

உன் கடமையை நீ ஆற்றவேண்டாமா 
உலகாளும் எம்பெருமனே!

லாயல் கஸ்டமரைப் புறக்கணித்துவிட்டு
புதிய கஸ்டமருக்கு மட்டும் 
புதுப் புது சலுகை தருவான் கார்ப்பரேட் வியாபாரி

நீயோ லாயல் பக்தனையும் கைவிட்டுவிட்டு
புதிய பக்தனையும் சேர்க்காமல்
புதிரான வணிகம் செய்கிறாயே

நல்லது...
நீ செய்வது வணிகமில்லை என்கிறாயா?

பக்தி/மதம் வணிகமாவதன் மேல்
அத்தனை வெறுப்பென்றால் பகவானே
நீ அதைச் செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது
வேறு யாரையும் அதைச் செய்யாமலும் தடுத்தாகவேண்டும்.

ஜோ நஹிம் காத்தா ஹை, 
வோ கிஸி ஒளர்க்கோ பி, 
கானே நஹிம் தேனா சாஹியே மஹோதேவ்!

உன் மதத்தைப் பரப்பவேண்டாம் என்று 
நீ நினைப்பது நல்லதுதான்
அடுத்தவனைப் பரப்பவிடாமல் தடுப்பதும் அவசியமே

பயிர் செய்தால் மட்டும் போதாது
வலுவான வேலியும் அமைக்கவேண்டும்.

நீ குப்பை கொட்டாமல் இருந்தால் மட்டும் போதாது
கண்டவன் வந்து குப்பை கொட்டாமலும் காப்பாற்றவேண்டும்.

குலதெய்வப் பயண வழியெங்கும்
உன் கொடி பறக்கவேண்டும் எம்பெருமானே

உன் அருளாலே உன்னையும் காத்துக்கொள்
உலகை ஆளவேண்டிய உத்தமனே
*

Friday, April 14, 2023

கொலுசு

 உனது 

கண்கள் எழுதும் 

கவிதைக்குத்தான் 

இசை அமைக்கிறதோ 

உனது 

கால் கொலுசு !!

Friday, March 31, 2023

ரதியும் வந்தாள் ...

 வாங்கும்போது 

24 காரட்தான் ....


எப்படி கணக்கிடுவது 

நீ அணிந்தபின்பு 

எத்தனை காரட் என்று !! 

===================

எதற்கு 

ஹால் மார்க் முத்திரை ...

உன் கழுத்தில் 

இருப்பதே 

தங்கத்திற்கு 

தன்னிகரில்லா 

தர முத்திரைதானே !!

======================

வெட்கி போனது 

கோஹினூர் வைரம் ...

உனது   

இதழில் துளித்த 

பனித்துளி கண்டு !!

===================

மன்மதனின் 

ரதியும் வந்தாள் ...

அவள் அழகில் 

கொஞ்சம் 

கடன் வாங்கி 

சென்றாள் !!


ஊர்வசியும் 

ஓர் நாள் வந்தாள் 

அவளுக்கு 

தோழி ஆனாள் !!

================

மல்லிகைப்பூவே 

சிவந்ததேன் ....

மனதிற்குள் என்னை 

கசந்ததேன் !!

=================

ஆனந்தம் நீராடும் நதியா 

அலைகளில் காண்பது ரதியா 

கண்ணில் விழுந்தது விதியா 

காலதேவன் செய்த சதியா 

==============================

தென்றல் நடந்தது மெல்ல 

தேனாய் கவிதைகள் சொல்ல

தேனும் விஷமாய் கொல்ல


=================================

வண்ணங்கள் கூட்டும் அங்கமோ 

மெருகேறிய அழகு தங்கமோ 

எண்ணங்கள் அதில் தங்குமோ 

என்றும் கூட வர ஏங்குமோ 

==================================

உன் செந்தூரம் காட்டும் கலை 

என் நெஞ்சோரம் வீசும் வலை 

மயங்குது கோவில் சிலை 


==================================

நீ பேசும் 

சொற்களை 

தந்தது 

தமிழோ ...

அமுதமோ !!

==================================

வலிமையோடுதான் 

எழுதுகிறேன் ...

நீ 

தந்த வலி 

என் 

பேனாவுக்கு ஊற்றிய 

மையோடு !

=================================

ஒரே ஒரு 

வரம்தான் 

கேட்பேன் கடவுளிடம் ...

உன்னோடு இருந்த 

கடந்த கால 

பொழுதுகளை 

விலைக்கு வாங்குமளவு 

என்னை 

பணக்காரனாக்கி 

விடு என்று !!

================================

நாளைக்கென 

மிச்சம் இன்றி  

எல்லாம் சொல்லிவிட 

துடிக்கிறேன் ...


ஏதோ 

மிச்சம் வைத்து 

பிரிகிறேன் !!

====================================

உடல் 

இங்கேயே 

தங்கி விட்டது ...


பத்திரமாக 

பார்த்துக்கொள் ..

உன்னோடு 

வரும் 

என் உயிரை !!

=============================

இதயக்கோப்பையில் 

உன் நினைவுகள் 

தேநீராய் இனித்திருக்க 

இளைப்பாறுகிறேன் 

தனிமையில்...

=================================

என்ன 

கொடுமை இது ...


இதயத்தை 

திருடியவளிடமே 

மனு கொடுக்க 

வேண்டி இருக்கிறதே 

கண்டு பிடித்து 

கொடு என்று !

================================

கேள்விகள் 

நிறைய 

இருக்கின்றன 

என்னிடம் ...


பதிலாக 

நீ 

மட்டுமே 

இருக்கிறாய் !!

===========================

மதுக்குடத்தில் 

என்னை

அள்ளி போட்டது 

மது குடித்த 

இரண்டு கண்கள் 

================================

அட்சய திருதியையில் 

எது வாங்கினாலும் 

பல்கி பெருகுமாமே...

கொடுத்து விடு ...

ஓரக்கண்ணில்

இருக்கும் 

உன் காதலை !!

===============================

உந்தன் பார்வை மழை 

பொழியலாம் 

எந்தன் கவி மனது 

நிறையலாம் 

கனவுகள் கண்ணில் 

வரையலாம் 

கவலைகள் அதில் 

கரையலாம் 

================================

எழுதுவது இலக்கியம் என்றால் 

இலக்கணமாய் நீ 


வரைவது ஓவியம் என்றால் 

புள்ளிகளை நீ 


பாடுவது பாடல் என்றால் 

ராகமாய் நீ 


காதலே வாழ்க்கை என்றால்

நான் மடடும் ஏன் சோகமாய்

================================

ஒரு காதல் சாம்ராஜ்யம் 

கண்ணால் வரைந்தாள் 


இரு கண்களில்  நிழலாக 

கனவாய் கரைந்தாள் 

==============================



Saturday, March 25, 2023

சீனி

சீனி சிரிப்பை 
சிதற விட்டு போகிறாய்
நீ ...
சீனி குவியலில்  
சிற்றெறும்பாய் 
சிக்கிப் போகிறேன் 
நான் !!
==================

மரம் ஓய்வை விரும்பினாலும், 
காற்று விடுவதில்லை...
கரை ஓய்வை விரும்பினாலும், 
அலைகள் விடுவதில்லை...
மனது ஓய்வை விரும்பினாலும் 
உன் நினைவுகள் விடுவதில்லை !!
==========≈=≈=====≈===============
ஏனிந்த 
வன்மம் என்மீது  ..

ஜென்மங்களாய் 
காத்திருக்க 
வைக்கிறாயே !

===============
எந்தன் கனவுகள் 
பிரபஞ்சத்தைவிட 
பெரியதுதான் ...

உன் விழிகளுக்குள் 
எப்படி 
அடைபட்டது 
என்றுதான் புரியவில்லை !!
=====================
எல்லா மழையும் 
ஒரே மாதிரிதான் 
இருக்கிறது !!

நீ மட்டும் 
எப்படி 
ஒவ்வொரு மழையிலும் 
புதுசு புதுசாய் !!
================
நீ சூடும் 
மலர்கள் மட்டுமல்ல 
உன் 
கூந்தல் உதிரும் 
மலர்கள் கூட 
சொல்லி போகிறது 
ஏதோ ஒரு 
கவிதை !!
=================
இரண்டடியால் 
உலகையே 
அளந்து விட்டானாமே 
ஒருத்தன் ....
முடிந்தால் 
அளக்க சொல் 
உன் மீது 
நான் கொண்ட 
காதலை !!
=================
என் பார்வையை 
தொலைத்து விட்டு 
வந்திருக்கிறேன் ...
நீ 
என்னை
தொலைத்து விட்டு 
போன இடத்தில் !!
=====================
உச்சி வெயில் 
தகிக்கிறது ...
கொஞ்சம் 
விசிறிவிட்டு போ 
உன் 
விழிச்சிறகால் !!
================
ஓராண்டு 
ஆயுள் நீட்டி கிடைத்தால் 
என்ன செய்வாய் 
என்று கேட்டாள் ...
வேறென்ன 
உன்மீது 
இன்னொரு ஆயிரம் 
கவிதைகள் 
எழுதியிருப்பேன் !!
================
சுவாசிக்க 
காற்று  இல்லாமல் 
உயிரற்று கிடக்கின்றன 
சில வரிகள் ...
வாசிக்க 
நீ இல்லாமல் !!!
==============
உடலின் 
ஒவ்வொரு செல்லிலும் 
எழுதி வைத்திருக்கிறேன் 
உன் பெயரை ...

உன் 
கையிலிருக்கும் 
செல்லிலாவது '
வைத்திருக்கிறாயா 
என் பெயரை !
=================

வாசிக்க வா என
உன்னை
அழைக்குது
எனது கவிதை இதழ் ...

வா ... சிக்க ... வா என
என்னை
அழைக்குது 
உனது கவிதை இதழ்
======================

Sunday, March 19, 2023

சிட்டு குருவியைத் தேடி

இரு வரி 
கவிதையாவது 
எட்டி பார்க்காதா 
என் காகிதத்தில் ...
நீ ....
சாளர கதவின் மீது 
எட்டி பார்த்தால் ! 
==========================
நெல்லின் 
விதைகளை 
தூவ 
காத்திருக்கிறேன் ...
வருவாயோ ....!?
மகிழ்ச்சியின் 
விதைகளை 
என்னுள் 
தூவ !
==========================
நீ கால் நனைக்க 
காத்திருக்கின்றன 
சிற்றோடைகள்  !!
==========================
நீ கழுத்தை 
சிலுப்பிக்கொள்ளும் 
அழகை தேடி  
ஊரெங்கும் வீசுகிறது 
தென்றல் !!
==========================
நீ சிறகடிக்க 
தன் இதயம் திறந்து 
பரந்திருக்கிறது 
வானம் ...!!
==========================
உன்னை போலவே 
நானும் 
தேடுகிறேன் 
அரிசி 
புடைக்கும் 
என் 
பாட்டியை !
==========================
காங்க்ரீட் கோபுரங்களால்
உன்னை 
தள்ளி வைத்தாரோ !
மரங்களை வெட்டி 
உனக்கு 
கொள்ளி வைத்தாரோ !
மின்காந்த அலைகள் 
உன்னை 
அள்ளி 
போயினவோ !
==========================
எங்கள் 
இதய மேடுகளில் 
அறிவியல் 
பூத்து விட்டதால் 
களத்து மேடுகளில் 
உனக்கான 
நெல்மணிகள் 
பூக்கவில்லை !
==========================
நீ
இல்லாது போனால்
எதிர்காலத்தில் 
"மனித தினம்"
என்ற ஒன்றை 
பூச்சி இனம்  
கொண்டாடுமோ ! ?
==========================

Friday, February 17, 2023

பிறக்கட்டுமா

 பட்டாம் 

பூச்சியாய் 

பிறக்கட்டுமா ...

உந்தன் 

பிஞ்சு 

கைக்கு 

கிட்டாமல் 

பறக்கட்டுமா !


பொன் வண்டாய் 

பிறக்கட்டுமா ..

தீப்பெட்டியில் 

அடைத்து 

விளையாடி 

களித்திடுவாயா !


Tuesday, February 14, 2023

காதல் வீர் சக்ரா

 இசை 

கருவிகளின் 

பட்டியலில் 

சேர்த்து 

விட்டார்களா ...

உன் 

கொலுசை !


நினைவுகளால்

நெய்த

மோகப்பாய் 

விரித்து 

உறங்க சொல்கிறாய் ...

எப்படி 

உறங்குவேன் !!


உனது 

பார்வை 

என்னும் 

போர்களத்தில் 

பலமுறை போராடி 

இன்னமும் 

இருக்கிறேனே 

உயிரோடு ...

எனக்கு 

தரமாட்டார்களா 

காதல் வீர் சக்ரா !!


தென்றல்

 காற்றே 

உண்மையை 

சொல் ..

அவள் 

இதயம் நுழைந்து 

வருவதால்தானே 

உனக்கு 

பெயர் 

தென்றல் !


ஒவ்வொரு 

பூவையும் 

தொட்டு பார்த்து 

யாரையோ தேடி 

அலைகிறது  

என்னைப்போலவே

தென்றலும் !


அவளோடு 

என்ன 

உடன்படிக்கையோ ...

அடிக்கடி 

தழுவி 

அவளை 

நினைவூட்டி 

செல்கிறது 

தென்றல் !


பூவின் 

வாசனையை 

கொள்ளையடித்து 

ஏதுமறியா 

கள்வனாய் 

கடந்தது 

தென்றல் !


தேகத்தை 

குளிர வைத்து 

நெஞ்சில் 

அனல் மூட்டி 

கடந்து போனது 

தென்றல் !


என்னை 

சாய்த்து 

நகைக்கிறது 

பூவை கூட 

சாய்க்க 

திராணியற்ற 

தென்றல் !


தென்றல் கவிதைகள் 


எனக்கே 

எனக்கென்று 

தனியாக 

தென்றலொன்று 

வேண்டும் ...

என் ஆசைகளை 

சுமந்து வந்து 

உன் 

காது மடலில் 

கிசுகிசுக்க !


தென்றல் 

தீண்டும்போது 

நீ 

சிலிர்ப்பதை 

போலவே 

நானும் 

சிலிர்த்து 

போகிறேன் 

உன் 

பார்வை 

தீண்டும்போது !


உன் 

விழியசைவில் 

தன 

வியர்வையை 

ஆற்ற 

காத்திருக்கிறது 

தென்றல் !



என்னை 

பற்றித்தான் 

எழுதுகிறானா ...

மெல்ல 

ஜன்னல் திறந்து 

எட்டி பார்த்தது 

உன்மீது 

பொறாமை கொண்ட 

தென்றல் !

Saturday, January 28, 2023

நெருப்பு

 நீ 

விடுத்த 

வார்த்தைகளில் 

தொடுத்த 

கவிதைகள் !!


இன்னமும் 

புரியவில்லை ....

உனது காதல் 

பொய் பூசி 

வந்ததா ...

இல்லை ....

உனது பொய் 

காதலை 

பூசி வந்ததா !!


உனது 

புன்னகையை தந்து 

கவிஞனாக்கினாய் ...

பொன்நகை தருகிறேன் 

காதலனாக்கி விடு !



உனது 

அழகில் 

குளிர் 

காய்கிறதோ ...

நெருப்பு !!


கத்தியின்றி 

ரத்தமின்றி 

யுத்தமொன்று 

வருகுது ...

உன் கண்கள் 

அதனை 

நடத்துது !


நீ

கற்களை

வீசியிருந்தால் 

என் உயிரை

கொன்றிருக்கும் ...

உயிரோடு

கொல்கிறதே

நீ

வீசிய 

சொற்கள் 


மேகமே மேகமே

பால் நிலா தேய்ந்ததே...

தேகமே தேயினும் 

தேன் குரல் வீசுதே...


காதல்

குடைவது

சுகமானதுதான் ...

அதை விட

சுகமானது

சில வேளைகளில் 

காதை குடைவது..




ஏர் முனை போன்ற 

கூரிய விழிகளால்


என் இதய நிலத்தை 

உழுகின்றாய்


விளைந்த நெற்கதிர்கள்

காற்றில் சலசலக்கும் போது 


கிளப்பும் இன்னிசை 

போன்ற சிரிப்பால் 


என்னை 

வசீகரிக்கிறாய் 


களத்துமேட்டில்

குவிந்து கிடக்கும் 


நெல்மணிகள் போன்று 

தகதகக்கும் 


விம்மி நிற்கின்ற

உன் அழகியலால்


என்னை அக்கினியாய்

கொதிக்க வைக்கிறாய் 


வளைந்து நெளிந்து 

ஓடுகின்ற 


வாய்க்கால் நீர் போன்ற 

உன் கூந்தலால்


என் ரத்த அழுத்தத்தை 

எகிற வைக்கிறாய் 


அறுவடைக் காலத்தின் 

தெள்ளிய நிலவாக 


பட்டொளி வீசுகின்ற 

உன் பேரழகு 


என்னை சவாலுக்கு 

அழைக்கும் போதெல்லாம் 


உன்னிடம் நான் 

அடிமையைப் போலல்லவா 


உழைப்பை இழக்க 

வேண்டியிருக்கிறது

சீனி சிரிப்பு

விலை மதிப்பில்லா 
பொருள் ஒன்றை 
பரிசளிக்க 
வேண்டும் ....
தருவாயா 
உனது 
புன்னகையை !!

Saturday, January 7, 2023

பறவை

புள்ளினங்கால்...புள்ளினங்கால்..
நீ
எடுத்துச் செல்ல ஏதுமில்லை உனக்கு..!

சேர்த்து வைக்க தேவையில்லை உனக்கு !

பார்த்துக் கொள்ள உறவுமில்லை உனக்கு !

பழசை எண்ணி கவலையில்லை உனக்கு !

வலசை போகும் போது இளையராஜா பாட்டு இல்லை உனக்கு !

நீ கொடுத்து வைத்தது அவ்வளவு தான்..!!

பேராசை இல்லாத உன்னை
வாழ்த்திவிட்டு

 நான் ஐந்தாம் தலைமுறை இணையத்தில் உலக வலசை செல்கிறேன்...

இறக்கும் வரை பற..!
வாழ்த்துக்கள்