வர்ணத்தை
பூசி நடப்பது
பட்டாம்பூச்சி
மட்டும்தான்
போலிரூக்கிறது !!
======================
நீ பேசுவது
காதிலும்
உன் மௌனம்
இதயத்திலும்
ஒலிக்கிறது !!
===========================
எந்த நாடும்
இன்னமும்
கண்டு பிடிக்கவில்லை ..
அவள்
பார்வைக்கணையை விட
அதிக சேதத்தை
ஏற்படுத்தும்
ஏவுகணையை !!
===========================
கூட்டத்தில் இருந்தபோது
உணரவில்லை ...
தனித்து
விடப்பட்டபோது
புரிந்தது ...
நான் யாரென்று!!!!
===========================
குற்றவாளிகள்
தப்பித்து
விடுகிறார்கள் ...
நிரபராதிகளுக்கு
ஆயுள் கால தண்டனை ...
காதல் நீதி மன்றத்தில் !!
===========================
இரவும்
பகலும்
வீண்தானோ !!?
என்
உறக்கமும்
விழிப்பும்
உன்
கட்டுப்பாட்டில்
இருப்பதால் !!!
===========================
சிரிப்பு
புன்னகை
கோபம்
தாபம்
தவிப்பு
ஊடல்
வியப்பு
என
என்னென்ன உணர்வுகளையோ
வெளிப்படுத்துகிறாய் ...
காதலை தவிர
வேறெதையும்
வெளிப்படுத்த
தெரியவில்லை
எனக்கு !!
===========================
எழுத முடியாத
ஒரு
கவிதையில்
ஒளிந்திருக்கிறது
உனது
பெயர் !!!
===========================
அஞ்சாதே !!
அடுத்த பிறவியில்
உன்னை
ஏமாற்றும்படி
இறைவனால்
என்னை படைத்து
உனக்கு தண்டனை கொடுக்க
முடியாது !!
அவனுக்கு தெரியாது ..
எந்த பிறவியிலும்
உன்னை ஏமாற்ற
என்னால் முடியாதென்று !!
===========================
உனது
ஒவ்வொரு
நினைவுகளும்
முற்று புள்ளிக்கு பதில்
காற் புள்ளியையே
விட்டு விட்டு
செல்கிறது
=====================
உன் காதல்
சிறந்ததா...
என் காதல்
சிறந்ததா ...
என்ற போட்டிக்கிடையே
நான்தான் சிறந்தவன்
என்று
நீரூபித்து போகிறது
காலம் !!
============================
கண்களால்
நாற்று நட்டு ...
உதடுகளால்
உரமிட்டு ...
காதலால்
மழை பொழிந்து ...
விளைய செய்து
விடுகிறாய் ..
என்
கவிதை
வயலை !!
==============================
தொலைந்து
போனதென்னவோ
சாவிதான் ...
உடைப்பட்டது
பூட்டு !!
=================================
நீ
தொலைத்த
இடத்தில்தான்
இன்னமும்
இருக்கிறேன் ...
என்றாவது
ஒருநாள்
தேடி
வருவாயென !!
=================================