Sunday, September 30, 2018

இறைவனே சிறந்த படைப்பாளி ??

ஏழைக்கு தர்ம தரிசனத்தில் தூரமாகவும்
பணக்காரனுக்கு மிக அருகிலும்
தரிசனம் தந்தான் இறைவன்  !!!
கோவில் சிலையில் மட்டுமே
இறைவன் இருப்பதாக  எண்ணுவதாலும்
பணத்தால் மட்டுமே இறைவனை காண முடியும்
என்று நம்புவதாலும் !!


யாரையாவது தலையில்
தூக்கி வைத்து கொண்டாட நினைத்தால்
அது குழந்தையாக இருக்கட்டும் ..
ஏனென்றால் குழந்தை மட்டுமே
துரோகம் நினைக்காது !!!!
உண்மை அந்நேரத்தில்
நம்மிடமும்  எதிர்பார்ப்பில்லாத
அன்பு இருக்கும் ..
அதனால் துரோகமில்லை ! ஏமாற்றமில்லை !


இறைவனே சிறந்த படைப்பாளி
என்று யார் சொன்னது ?
உன் நினைவுகளை அழிக்க
ஒரு FORMAT கமாண்ட் அட் லீஸ்ட் ஒரு
DEL பட்டன் கூட இதயத்தில் வைக்க வில்லையே !

பட்டாம் பூச்சியே
செடியின் மலர்களில் வசந்தத்தை தேடி
ஏமாந்து போகாதே !!
என்னவள் அந்த மலர்களை சூடிய பின்பு வா !!


காதல் தோல்வியால் துவண்டு போக ..
நான் ஒன்றும் 10 காதலில் ஜெயித்தவன் அல்ல ...
100 காதலில் துரோகத்தால் தோற்றவன் ...

காதலில் ஜெயித்து குடும்ப காவியம் படைக்கலாம்
என்று இறுமாந்திருந்தேன் ! நம் காதலை  பற்றி எப்படிப்பட்ட தாழ்வான சிந்தனை  என்னுடையது !!
நீயோ நம் காதலை ஊத்தி மூடி அமர காவியமாக்கினாய்  !
நம் காதலை  பற்றி  என்னே உயரிய சிந்தனை உன்னுடையது  !!





Saturday, September 1, 2018

ஒவ்வொரு நாளும்

ஒவ்வொரு நாளும் உன்னிடம் முழு அன்பையும்
காட்டி விட்டதாக நினைக்கிறேன்
ஆனால் அடுத்த நாள் தான் புரிகிறது  ... இல்லை என்று ..

ஒவ்வொரு நாளும் நீ என்னை நேசிப்பதை விட 
அதிகமாக நான் உன்னை நேசித்து ஜெயிக்க நினைக்கிறேன் ...
அதிலும் தோற்றுத்தான் போகிறேன் ...