காற்றே
உண்மையை
சொல் ..
அவள்
இதயம் நுழைந்து
வருவதால்தானே
உனக்கு
பெயர்
தென்றல் !
ஒவ்வொரு
பூவையும்
தொட்டு பார்த்து
யாரையோ தேடி
அலைகிறது
என்னைப்போலவே
தென்றலும் !
அவளோடு
என்ன
உடன்படிக்கையோ ...
அடிக்கடி
தழுவி
அவளை
நினைவூட்டி
செல்கிறது
தென்றல் !
பூவின்
வாசனையை
கொள்ளையடித்து
ஏதுமறியா
கள்வனாய்
கடந்தது
தென்றல் !
தேகத்தை
குளிர வைத்து
நெஞ்சில்
அனல் மூட்டி
கடந்து போனது
தென்றல் !
என்னை
சாய்த்து
நகைக்கிறது
பூவை கூட
சாய்க்க
திராணியற்ற
தென்றல் !
தென்றல் கவிதைகள்
எனக்கே
எனக்கென்று
தனியாக
தென்றலொன்று
வேண்டும் ...
என் ஆசைகளை
சுமந்து வந்து
உன்
காது மடலில்
கிசுகிசுக்க !
தென்றல்
தீண்டும்போது
நீ
சிலிர்ப்பதை
போலவே
நானும்
சிலிர்த்து
போகிறேன்
உன்
பார்வை
தீண்டும்போது !
உன்
விழியசைவில்
தன
வியர்வையை
ஆற்ற
காத்திருக்கிறது
தென்றல் !
என்னை
பற்றித்தான்
எழுதுகிறானா ...
மெல்ல
ஜன்னல் திறந்து
எட்டி பார்த்தது
உன்மீது
பொறாமை கொண்ட
தென்றல் !
No comments:
Post a Comment