நாகங்களை
அணிந்து
பித்தனென்று
பிதற்றி
திரிபவனே !!
ஒரு முறை
அணிந்து பார் ...'
எனது
சோகங்களை ...
புரிந்து கொள்வாய்
யார்
பெரும் பித்தனென்று !!
≈==============================
நூறு
முத்தங்களை தந்து விட்டு
எந்த முத்தம்
இனிமை என்று கேட்கிறாய் ...
தேனில்
எந்த துளி
இனிமை
என்று சொல்வேன் !!
No comments:
Post a Comment