Sunday, September 24, 2023

"அமுத" கானங்கள்

 உன் 

நினைவுகளை 

தூண்டி 

தூங்க விடாமல் 

"கொல்லும்"

பாடல்களை 

"அமுத" கானங்கள் 

என்ற பெயரில் 

ஒலிபரப்பி 

கொண்டிருக்கிறது 

சென்னை 

வானொலி !

========================

நல்லதை 

நினை

நல்லதே

நடக்கும் 

என்றார்கள் ...

அதனால்தானே 

நினைத்தேன்

உன்னை...!!

========================

மனம் என்ற 

browser ல்  

ஆயிரம் tab கள்  

திறந்திருக்கின்றன ...

சில tab கள் 

hang ஆகி விட்டன ...

அந்த 

இசை மட்டும் 

எந்த tab ல் 

கேட்கிறதென்று 

தெரியவில்லை !!

========================

மூன்று வயதில் 

பொம்மை 

உடைந்ததற்கே 

அழுது புரண்ட 

நான் ..

இன்று 

அமைதியாகவே 

இருக்கிறேன் ..

ஏதேதோ 

இழந்த 

பின்பும் !!

========================

படகானால்

ஒரு நாள் 

கரை சேர 

வேண்டுமே ...

அதனால் 

ஆகி விட்டேன் 

மீனாய் !!!

========================

வேப்பெண்ணை  

வார்த்தைகளை 

தேன் கலந்து 

விற்று விட்டு 

போய் விட்டாய் !


தேனான வாழ்க்கை 

வேப்பெண்ணை 

ஆகி விட்டது 

எனக்கு !

========================

அடித்திருந்தால் கூட 

வலித்திருக்காது...

நடித்திருந்தாய்....

வலிக்கிறது!!

========================

மறுத்துச் சொன்னாலும் 

சிரித்துச் சொல்...

அந்த சிரிப்பில் 

மறக்க முயற்ச்சிக்கிறேன் 

மறுப்பின் வலியை !!

========================

எனக்கு 

ஏன்

உன்னை பிடித்தது 

என்று தெரியவில்லை...

கொஞ்சம் 

கேட்டு 

சொல்லேன்..

என் 

இதயத்திடம்.  !!

========================

கும்பிட்டால் 

முக்தி தருவேன் 

போர்டு  வைத்தார் 

கடவுள் ...

கண்டு கொள்ளவில்லை 

யாரும்...

கும்பிட்டால் 

பணம் கொட்டும் 

என்று

மாற்றினார் போர்டை...

அலைமோதியது 

கூட்டம்!!

========================

அளவில்லா 

அன்பை காட்டி 

மயக்கி விட்டாய் 

சிவனை ...

உன்னோடு

ஒப்பிட்டு 

என்னை

அரக்கன்

என்கிறான்

அவன் !!!

========================

காலையில் 

இரண்டு நிமிடங்கள் 

மட்டும் 

கடவுளுக்கு ஒதுக்கி 

வேண்டிக் கொண்டேன் ..

ஒவ்வொரு வினாடியும் 

என்னோடு இருந்து 

காத்துவிடு ...

========================

உன்

இதயச்சிறையில் 

இருப்பதைவிட 

வேறென்ன 

சுதந்திரம் 

வேண்டும் 

எனக்கு!!

========================

உன்னை 

வர்ணித்து 

நான்

அயர்ந்தாலும் ..

அயராது 

போலிருக்கிறதே 

தமிழ்!!

========================

அறிவியல் 

அறிந்து 

சொல்லுமோ...

உன் 

விழி ஈர்ப்பு 

சக்தியை!!

========================

உன் 

கருவிழி மையால் 

இதழ் வரி போட்டு 

என் 

இதய பக்கங்களில் 

எதையெதையோ 

நீதான் 

கிறுக்குகிறாய் ..

கவிதை 

என்ற 

பெயரில் !