Saturday, February 24, 2024

கவிதைகள்

 உவமைகளை 

அள்ளி 

வீசுவது 

கமபனா ...

காளிதாசனா ...

வியந்து 

பார்த்தேன் ...


அதே 

வியப்போடு 

நின்றன 

வாத்ஸாயனின் 

விழிகள் !!


=========

விழிகளால் 

கொஞ்சம் 

தொட்டு 

பார்க்கிறேனே ..


விரல்களால் 

தொட 

முடியாத 

அந்த 

தூரத்து நிலவை !


===============

நிலவை 

தொட 'கோடிகளில் 

சந்திரயான் 

எதற்கு ...!


பத்து பைசா 

ஓலை 

சுவடியில் 

காளிதாசன் 

தொட்டு விட்டானே 

கவிதையால் !!

=============

கவிதையாய் 

நீ 

நடக்கும் 

நடையில்தான் ....


எனது 

கவிதை 

சமையலறையில் 

சுவையாய் 

தயாராகின்றன 

சில 

கவிதைகள் !!

===========

கவிதைகளில் 

இழைந்து 

ஓடும் 

தாகம்  .....


தாகம் தீர்க்க 

ஆயிரம் 

குவளை

நீருமாய் 

அலைகிறதோ 

ஒரு 

மேகம்