உவமைகளை
அள்ளி
வீசுவது
கமபனா ...
காளிதாசனா ...
வியந்து
பார்த்தேன் ...
அதே
வியப்போடு
நின்றன
வாத்ஸாயனின்
விழிகள் !!
=========
விழிகளால்
கொஞ்சம்
தொட்டு
பார்க்கிறேனே ..
விரல்களால்
தொட
முடியாத
அந்த
தூரத்து நிலவை !
===============
நிலவை
தொட 'கோடிகளில்
சந்திரயான்
எதற்கு ...!
பத்து பைசா
ஓலை
சுவடியில்
காளிதாசன்
தொட்டு விட்டானே
கவிதையால் !!
=============
கவிதையாய்
நீ
நடக்கும்
நடையில்தான் ....
எனது
கவிதை
சமையலறையில்
சுவையாய்
தயாராகின்றன
சில
கவிதைகள் !!
===========
கவிதைகளில்
இழைந்து
ஓடும்
தாகம் .....
தாகம் தீர்க்க
ஆயிரம்
குவளை
நீருமாய்
அலைகிறதோ
ஒரு
மேகம்
No comments:
Post a Comment