கோவிலுக்குள்
என்னை
ஈர்த்தது ...
வாசலில்
கண்ட
உனது
காலணி !!
======================
எங்காவது
மறந்து
வைத்து
விட மாட்டோமா என்று
உன்
நினைவுகளை
தினம்
சுமந்து பார்க்கிறேன்
குடையாய் ...
======================
நிலவை
மறைத்தது
குடை !!
=====================
இமைகளை
எதற்கு
படைத்தானோ
இறைவன் !!
அடிக்கடி
சிமிட்டி
உன்னை
பார்க்கும்
நேரத்தை
குறைத்து
விடுகிறதே !!
=====================
மழையில்
நனைந்தாலும்
உனது கைப்பிடியில்
குளிர்
காய்ந்து விடுகிறது ...
குடை !!
=====================
தாலாட்டை
சொல்லித்தந்த
உனது
மௌனம்தான்
இன்று
ஒப்பாரியையும்
சொல்லித்தந்து
போகிறது !!
=====================
எனது
நாட்குறிப்பில்
மட்டுமல்ல ...
வினாடி குறிப்பிலும்
இல்லை ...
உன்னை
நினைக்காத
பொழுதுகள் !!
=====================
உன்னை
பார்க்கும்
போதெல்லாம்
கவிதை
படிப்பதாய்
சொல்கின்றன
எனது
கண்கள் !!
=====================
நான்
பேசினால்
காதல் ...
நீ
பேசினால்
கவிதை !!
=====================