Friday, January 24, 2025

குடையாய்


======================
எங்காவது 
மறந்து 
வைத்து 
விட மாட்டோமா என்று 
உன் 
நினைவுகளை 
தினம் 
சுமந்து பார்க்கிறேன் 
குடையாய் ...
======================
நிலவை 
மறைத்தது 
குடை !!
=====================
இமைகளை 
எதற்கு 
படைத்தானோ 
இறைவன் !!
அடிக்கடி 
சிமிட்டி 
உன்னை 
பார்க்கும் 
நேரத்தை 
குறைத்து 
விடுகிறதே !!
=====================
மழையில் 
நனைந்தாலும்  
உனது கைப்பிடியில் 
குளிர் 
காய்ந்து விடுகிறது  ...
குடை !!
=====================
தாலாட்டை  
சொல்லித்தந்த 
உனது 
மௌனம்தான் 
இன்று 
ஒப்பாரியையும் 
சொல்லித்தந்து 
போகிறது !!
=====================
எனது 
நாட்குறிப்பில் 
மட்டுமல்ல ...
வினாடி குறிப்பிலும்  
இல்லை ...
உன்னை 
நினைக்காத 
பொழுதுகள் !!
=====================
உன்னை 
பார்க்கும் 
போதெல்லாம் 
கவிதை 
படிப்பதாய் 
சொல்கின்றன 
எனது 
கண்கள் !!
=====================
நான் 
பேசினால் 
காதல் ...
நீ 
பேசினால் 
கவிதை !!
=====================
மழைக்கும் 
கவிதை 
பிடிக்கும் 
போலிருக்கிறது ...
அடிக்கடி 
வந்து 
விடுகிறதே 
உன்னை 
நனைக்க !!
x

No comments:

Post a Comment