Friday, January 24, 2025

குடையாய்

 கோவிலுக்குள் 

என்னை 

ஈர்த்தது ...


வாசலில் 

கண்ட 

உனது 

காலணி !!


======================

எங்காவது 

மறந்து 

வைத்து 

விட மாட்டோமா என்று 

உன் 

நினைவுகளை 

தினம் 

சுமந்து பார்க்கிறேன் 

குடையாய் ...


======================

நிலவை 

மறைத்தது 

குடை !!


=====================


இமைகளை 

எதற்கு 

படைத்தானோ 

இறைவன் !!


அடிக்கடி 

சிமிட்டி 

உன்னை 

பார்க்கும் 

நேரத்தை 

குறைத்து 

விடுகிறதே !!


=====================


மழையில் 

நனைந்தாலும்  

உனது கைப்பிடியில் 

குளிர் 

காய்ந்து விடுகிறது  ...


குடை !!


=====================


தாலாட்டை  

சொல்லித்தந்த 

உனது 

மௌனம்தான் 

இன்று 

ஒப்பாரியையும் 

சொல்லித்தந்து 

போகிறது !!

 

=====================

எனது 

நாட்குறிப்பில் 

மட்டுமல்ல ...

வினாடி குறிப்பிலும்  

இல்லை ...

உன்னை 

நினைக்காத 

பொழுதுகள் !!


=====================

உன்னை 

பார்க்கும் 

போதெல்லாம் 

கவிதை 

படிப்பதாய் 

சொல்கின்றன 

எனது 

கண்கள் !!

=====================

நான் 

பேசினால் 

காதல் ...


நீ 

பேசினால் 

கவிதை !!

=====================

மழைக்கும் 
கவிதை 
பிடிக்கும் 
போலிருக்கிறது ...

அடிக்கடி 
வந்து 
விடுகிறதே 
உன்னை 
நனைக்க !!


No comments:

Post a Comment