முட்டாள் கவிஞன்
பாடினானாமே?
நான்
மனிதனாய் பிறந்து
காதலித்து
வேதனையில்
வாட வேண்டுமென்று!!
மடையன் ...
காதலுக்கு
உவமையே
நாமென்று
அறியான்
போலும்!!
**************************************
உன்
மனதிலாடும்
சித்தன்
நான்!!
ஏனோ
என்னை
மயானத்திலாடும்
பித்தன்
என்கிறார்கள்!!
*****************************************
நீ
தடுக்கவே
வேண்டாம் ...
இதயத்தில்
இருக்கும்
சக்தியை தாண்ட
ஆலகாலத்திற்கு
சக்தி இருக்கறதா
என்ன!?
****************************************
மும்மொழி
திட்டம்
இதுதானோ!!?
நீ
பேசும் மொழி..
உனது
கண்களின் மொழி..
உனது
மௌன மொழி!!
******************************************
கண்களாலேயே
என்
இதயம் முழுதும்
அள்ளிப்போகிறாய் ...
இதயமற்றவனென
பரிகசிக்கிறார்கள்
அடியார்கள்!!
******************************************
நான்
இடப்பாகத்தை
உனக்கு
தந்ததாக
கதை கட்டுகிறார்கள் ...
எனது
எல்லா பாகமும்
நீயே ஆக...
எப்பாகத்தை
தருவது
நான்!?
*****************************************
மனக்கிளையில்
நீ
சாய்ந்த
இடங்களிலெல்லாம்
துளிர்
விட்டிருக்கிறது ...
உன்
நினைவுகள்!!
********************************************
உலகிற்கு
ஒளி கொடுப்பது
நானே
என்கிறார்கள் ...
எனக்கல்லவா
தெரியும்
மின்சாரமாய்
நீ
இருக்கிறாய்
என்று!!
**********************************************
உயிர்
கண்களுக்கு
தெரியாதாமே !!
நீ
எப்படி
தெரிகிறாய்
என்
கண்களுக்கு!?
***********************************************
வெறும்
வார்த்தை கட்டுகளாய்
நான் கிறுக்கியது
கவிதை
ஆகி விட்டது..
நீ படித்த போது!!
************************************************
No comments:
Post a Comment