Wednesday, August 8, 2018

என் மனக்கடலில்

என் மனக்கடலில்
உன் நினைவுகள் கட்டுமரமாய் மிதக்கிறது !!

ஆர்ப்பரிக்கும் புயலாய் அலைக்கழிப்பாயோ ?
அமைதியான தென்றலாய் கரை சேர்ப்பாயோ ?
மனக்கடலில் உன் நினைவுகளோடு நானும் அமைதி கொள்வேனோ ?

===================================================

உன்னை காணாவிடில் அனலாகிறேன் !!
நீ வந்துவிட்டாலோ பனியாகிறேன் !!

நீயும் மழையோ !!

===================================================


Sunday, August 5, 2018

போதுமோ ஜென்மம் ஒன்று

நினைவெல்லாம் ஒரு நிலவு நின்று !
எழுதுதே கவிதை ஒன்று !

போதுமோ ஜென்மம் ஒன்று !
தீருமோ ஆசைகள் இன்று !

எண்ணங்கள் ஈடாவது என்று ?
வண்ணங்கள் கூடுமே அன்று !

உன் பார்வை போதுமே இன்று !
நெஞ்சம் அமைதி கொள்ளுமே நின்று !!


===============================


மழையும் நீயும் .....

வராவிட்டால் அனலாகிறேன் !
வந்தாலோ பனியாகிறேன் !!

==============================