கந்தல் துணியை
பொறாமையுடன் பார்க்கின்றன
பட்டுத்துணிகள்!
நீ முகம் பார்த்த போது
தன்னை
அழகாக்கி கொண்டது
கண்ணாடி!
சிவப்பை
சிவப்பாக்குவது
எப்படி என்று
மலைத்து நின்றது
நீ பூசிய
உதட்டு சாயம்!
தேவதையை
சுமப்பதால்
உனது காலணிகளுக்கும்
உண்டு காரணப் பெயர்
பல்லக்கு!
No comments:
Post a Comment