Tuesday, September 14, 2021

கவிதைப்பூக்கள்

நீ முகம் துடைத்த 
கந்தல் துணியை 
பொறாமையுடன் பார்க்கின்றன 
பட்டுத்துணிகள்!

நீ முகம் பார்த்த போது 
தன்னை 
அழகாக்கி கொண்டது 
கண்ணாடி!

சிவப்பை 
சிவப்பாக்குவது
எப்படி என்று 
மலைத்து நின்றது 
நீ பூசிய
உதட்டு சாயம்!

தேவதையை 
சுமப்பதால் 
உனது காலணிகளுக்கும்
உண்டு காரணப் பெயர் 
பல்லக்கு!

No comments:

Post a Comment