மனதை பிச்சி போட்ட
பிச்சி பூவே !
இரவிலும் வந்த பகல் கனவே !
நிழலையும் வாட்டிய காதல் சூரியனே !
கடலளவு தாகமடி என் நெஞ்சத்திலே !
தாகம் தீர்க்க சிறு குவளையோடு வந்தாய் கஞ்சத்திலே !
பொங்கி வரும் காவிரியாய் பாய்ந்து விடு என் பக்கத்திலே !
நம் காதல் கண்டு மன்மதனும் ரதியும் வாட வேண்டும் ஏக்கத்திலே !
என் காதலை
பகடையாக உருட்டி
என் காதலுக்கு
நித்திய அஞ்ஞாத வாசம்
பெற்று தந்த காதல் சகுனி!
என் காதலுக்கு
நிரந்தர வனவாசம்
பெற்று தந்த
காதல் கூனி !
No comments:
Post a Comment