யமுனையில் ஓடுவது
வெள்ளமா ...
உனது காதலா !!
பாதி உடல் தந்து
கஞ்சனானாய் சிவனே ...
முழுவதும் தந்து
முடித்திருப்பேன் ஜீவனே!!
தாயைப்போல் காதலி தேடியும்
உனக்கு கிடைக்கவில்லை
காதலியையும் தாய்போல் எண்ணும்
என் மனம்போல் உனக்கில்லை
நீயிருக்கும் இடமே
அயோத்தி என்றவளை
மூழ்க வைத்தாய் தீயிலே...
எந்த கங்கையில் மூழ்கி
பாவம் நீக்கி
தெய்வமானாய் ராமனே!!
பன்னிரு செவியிருந்தும்
கேட்டிலன் தணிகை வேலனே ...
உன்னைப்போல் வாழ்வு கொடு
என்றவனை
பழனி வேலன் போல் மாற்றி
வஞ்சனை செய்தானே!
சேவல் கூவியதை
தெளிவாய் செவியுற்ற சிவனே
காதல் நெஞ்சத்தின்
கேவல் கேளாது
கல்லாய் சமைந்த ஜடனே!!
உலகாளும் ஐயனே .
சரங்களை
நீ குத்த சொன்னது
சரங்குத்தியிலா ...
உன்னை நெஞ்சத்தில் ஆளும்
மாளிகைப்புறத்தின்
காதல் நெஞ்சத்திலா!
No comments:
Post a Comment