காதல் செடிக்கு
நீரூற்றும்
ஆசைகளடி ...
சொல்லாமல்
தவிக்கும்
இதயத்தின்
ஓசைகளடி !
காதல்
என்பது
வெறும்
வார்த்தையடி ...
மனதின்
கனவுகள் எல்லாம்
அதில்
அடங்காதடி !
காரணமின்றி
சிரிக்க
வைத்த காதல் ...
காரணமின்றி
அழவும்
வைக்குதடி !
தூரத்தில் இருந்தும்
எனை
ஆட்சி
செய்கிறாயடி ...
அருகில்
இருந்தால்
என்ன
ஆவேனடி !
காதல்
என்ற ஒன்றை மட்டும்
காதலன்றி
எதை கொண்டு
நிறைப்பாயடி !
மறக்க
முடியாத
பல நாட்களை
தந்த நீயும் ...
மறந்து விடாதா
என
ஒரு நாளை
ஏன் தந்தாயடி !
உண்மை கசக்கும்
என்ற தத்துவம்
உண்மையென்றால் ...
என் காதல்
உனக்கு கசப்பதில்
வியப்பேதடி ...
No comments:
Post a Comment