தோசை கல்லில்
ஊற்றி ஊற்றியே
கருகி போகிறது ...
பல
அம்மாக்களின்
வாழ்வு !
நான்
கவிதை
செய்கிறேன் ...
நீ
காதல்
செய்வதால் !
=====================
ஒரே வார்த்தைகளுக்கு
ஒரு நாள்
ஒரு அர்த்தமும் ....
இன்னொரு நாள்
இன்னொரு அர்த்தமும்
வருமா என்ன ....?
உனது
பழைய காதல் கடிதத்தை
படித்து பார்த்தேன் !!
உன் நினைவு
தீப்பெட்டியென
தெரிந்திருந்தும்
உரசி பார்க்கவே
விரும்புகிறது
எனது மனது !!
பாவம் இறைவன் ...
உன்னை
என்னிலிருந்து
பிரிக்க முடிந்தவனுக்கு
உன் நினைவுகளை
என்னிலிருந்து
பிரிக்கும்
சக்தி இல்லை !!
மனச்சுவரெங்கும்
ஆணியடித்து போனாய் ...
நானென்ன செய்வது
உனது படங்களை
மாட்டுவதன்றி !!
இமைகளை
மூடித்தானே
தூங்குகிறேன்
எப்படி நுழைகிறது
உனது நினைவு !!
தேடித்தேடி
தொலைந்தே
போனேன் !
திருப்பாவை
பாடுவாளா என
பெருமாளையும்
திருவெம்பாவை
பாடுவாளா என
ஈசனையும்
தினம் தினம்
பூஜையறையில்
பதை பதைக்க
வைத்து விடுகிறாய் !!
இந்திய தேசத்தில்
இருப்பவர்கள் எல்லாம்
எனக்கு சகோதரிகள் ...
நீ என்
காதல் தேசத்தில்
அல்லவா
இருக்கிறாய் !
தோலை நோக்கில்
இருந்தாலும்
தொல்லை நோக்காக
அல்லவா இருக்கிறது
உனது
பார்வை !!
வாழ்க்கை
ஆயிரம் காலத்து
பயிரென்றால்
உனது காதல்
அதற்கு மழை !
இறைவன் படைத்த
இயர்கையை
ரசிக்கிறாய் ...
நானும்
ரசிக்கிறேன் !
எதை நினைத்து
நீ
என்னை மறந்தாய் ...
எதை நினைத்து
நான்
உன்னை மறக்க !?
No comments:
Post a Comment