தேனி மலை காட்டுக்குள்ளே
மூடி வைத்த இருட்டு போல
சொல்லி வளர்த்த கூந்தலாலே
நெஞ்சம்
கந்தலாகி தவிக்கிறேனே !
சேலத்து மாம்பழம் போல்
இனிக்கும் உன் பேச்சால
கோலம் கெட்டு திரியுறேனே
நெஞ்சம்
விம்மலாகி தவிக்கிறேனே !
நாகை கடல் மீனை போல
அலையும் உன் கண்ணாலே
சோகையாய் ஆனேனே
நெஞ்சம்
திசை மாறி தவிக்கிறேனே !
கோவளம் சவுக்கு போல
வீசும் உன் பார்வையாலே
மனவளம் கெட்டேனே
நெஞ்சம்
கதிகலங்கி தவிக்கிறேனே !
தென்பாண்டி மிளகு போல
தகிக்கும் உன் நெனப்பால
மெழுகுபோல உருகுறேனே
நெஞ்சம்
உருகி தவிக்கிறேனே !
இருட்டுக்கடை அல்வாபோல
இனிக்கும் உன் காதலால
குருடனாய் ஆனேனே
நெஞ்சம்
இருளாகி தவிக்கிறேனே !
கொல்லிமலை கேணிக்குள்ள
குளித்துவிட்டு வந்தாலும்
அடங்காத அக்னியாய்
நெஞ்சம்
நீறாய் எரிய தவிக்கிறேனே !
உடன்குடி பனை பழங்கள்ளு
குடத்தோடு குடித்தவன் போல்
தடம் மாறி திரியுறேனே ...
நெஞ்சம்
இடம் மாறி தவிக்கிறேனே !
No comments:
Post a Comment