Saturday, January 28, 2023

நெருப்பு

 நீ 

விடுத்த 

வார்த்தைகளில் 

தொடுத்த 

கவிதைகள் !!


இன்னமும் 

புரியவில்லை ....

உனது காதல் 

பொய் பூசி 

வந்ததா ...

இல்லை ....

உனது பொய் 

காதலை 

பூசி வந்ததா !!


உனது 

புன்னகையை தந்து 

கவிஞனாக்கினாய் ...

பொன்நகை தருகிறேன் 

காதலனாக்கி விடு !



உனது 

அழகில் 

குளிர் 

காய்கிறதோ ...

நெருப்பு !!


கத்தியின்றி 

ரத்தமின்றி 

யுத்தமொன்று 

வருகுது ...

உன் கண்கள் 

அதனை 

நடத்துது !


நீ

கற்களை

வீசியிருந்தால் 

என் உயிரை

கொன்றிருக்கும் ...

உயிரோடு

கொல்கிறதே

நீ

வீசிய 

சொற்கள் 


மேகமே மேகமே

பால் நிலா தேய்ந்ததே...

தேகமே தேயினும் 

தேன் குரல் வீசுதே...


காதல்

குடைவது

சுகமானதுதான் ...

அதை விட

சுகமானது

சில வேளைகளில் 

காதை குடைவது..




ஏர் முனை போன்ற 

கூரிய விழிகளால்


என் இதய நிலத்தை 

உழுகின்றாய்


விளைந்த நெற்கதிர்கள்

காற்றில் சலசலக்கும் போது 


கிளப்பும் இன்னிசை 

போன்ற சிரிப்பால் 


என்னை 

வசீகரிக்கிறாய் 


களத்துமேட்டில்

குவிந்து கிடக்கும் 


நெல்மணிகள் போன்று 

தகதகக்கும் 


விம்மி நிற்கின்ற

உன் அழகியலால்


என்னை அக்கினியாய்

கொதிக்க வைக்கிறாய் 


வளைந்து நெளிந்து 

ஓடுகின்ற 


வாய்க்கால் நீர் போன்ற 

உன் கூந்தலால்


என் ரத்த அழுத்தத்தை 

எகிற வைக்கிறாய் 


அறுவடைக் காலத்தின் 

தெள்ளிய நிலவாக 


பட்டொளி வீசுகின்ற 

உன் பேரழகு 


என்னை சவாலுக்கு 

அழைக்கும் போதெல்லாம் 


உன்னிடம் நான் 

அடிமையைப் போலல்லவா 


உழைப்பை இழக்க 

வேண்டியிருக்கிறது

சீனி சிரிப்பு

 எந்த 

கணனியில் 

கணக்கு போடுவது ...

உனது 

இதழ் 

அணிந்திருக்கும் 

புன்னகை 

எத்தனை 

காரட் என்று ...!!


குபேரனும் 

ஏழையாகி 

விட்டானாம் ...

உனது 

புன்னகையின் 

விலை கேட்டு !!!


உன் 

புன்னகை 

மாடலில் 

மட்டுமே 

வளம் பெறுகிறது 

எனது 

இதய நாடு !!


புன்னகை 

சிந்திவிடு 

ஒரு வினாடி ... 

ஆயுளை 

ஏந்திவிடும்  

எனது 

இதய நாடி !!! 

 


பாவம் 

செடியில் 

பூத்த மலர்கள்  ...

உன் இதழில் 

நொடியில் 

பூத்த 

புன்னகை 

மலருக்கு வெட்கி 

உன் 

காலடியிலேயே 

விழுந்து விட்டன !!


இது 

என்ன மாயம் ...

உனது 

சீனி சிரிப்பு 

எனது 

ரத்தத்தில் 

சர்க்கரையின் 

அளவை 

கட்டுக்குள் 

வைக்கிறதே !!


இவ்வளவு 

புன்னகையை 

சேர்த்து 

வைத்திருக்கிறாய் ...

அம்பானி 

அதானி என்று 

யார் யாரையோ 

செல்வந்தர் 

என்கிறார்கள் !!!


உனது 

ஒரு வினாடி 

புன்னகை 

டவுன்லோட் 

செய்துவிடுகிறதே 

ஓராயிரம் கோடி 

இன்பங்களை !!


கடல் தொடும் 

கதிரவன்  

வெட்கத்தில் 

சிவக்கிறது ...

உன் 

இதழ் தொடும் 

புன்னகை 

கண்டு !!!


வார 

இதழ்களின் 

கவிதை பக்கங்கள் 

கலகலத்து போகின்றன 

உனது 

ஈர இதழ் பிரசுரிக்கும் 

புன்னகை 

கவிதைகளை படித்து !!!


உனது 

புன்னகையில் 

குளித்து

சொர்க்கம் 

கண்டபின்

எப்படி 

பொய் சொல்வது ..

கங்கையில் 

குளித்தால் 

பாவம் 

தீருமென்று !!


உனது 

அதரங்கள் 

புன்னகை 

மேடை 

கட்டும்

போதெல்லாம் 

எனது 

துயரங்கள் 

பாடை 

கட்டி 

கொள்கின்றன !!


ராகு 

காலத்தையும் 

அமிர்த

யோகமாக்கி 

விடுகிறது ...

அவ்வப்போது

வந்து போகும் 

உனது 

புன்னகை

யோகம் !!


கவிதைக்குள் 

இன்னொரு 

கவிதை  ....

உனது 

முகத்தில் 

புன்னகை !!!


உனது 

அரை வினாடி 

புன்னகையை 

கம்பன் 

கண்டிருந்தால் 

கவிதையில் 

வடித்திருப்பான் 

ஆயிரம் 

பால காண்டங்களை !!


இன்னமும் 

குழப்பம் தீரவில்லை 

நீ உதித்த  நாளா ...

நீ முதல் வார்த்தையை 

உதிர்த்த நாளா ...

நீ முதல் புன்னகையை 

உதிர்த்த நாளா  ...

எதனை 

கவிதை நாளாக 

அறிவிப்பதென்று !


விலை மதிப்பில்லா 

பொருள் ஒன்றை 

பரிசளிக்க 

வேண்டும் ....

தருவாயா 

உனது 

புன்னகையை !!



உனது 

புன்னகை புயலால் 

சாய்ந்து விட்ட 

எனது இதயத்திற்கு 

இதழ்களாலேயே 

கொடுத்துவிடு 

நிவாரணத்தை ...

எனது கன்னத்தில் !!


உனது 

அரை வினாடி 

புன்னகையே 

நிறைத்து 

விடுகிறது 

எனது 

கவிதை 

பக்கங்களை !!


Saturday, January 7, 2023

பறவை

புள்ளினங்கால்...புள்ளினங்கால்..
நீ
எடுத்துச் செல்ல ஏதுமில்லை உனக்கு..!

சேர்த்து வைக்க தேவையில்லை உனக்கு !

பார்த்துக் கொள்ள உறவுமில்லை உனக்கு !

பழசை எண்ணி கவலையில்லை உனக்கு !

வலசை போகும் போது இளையராஜா பாட்டு இல்லை உனக்கு !

நீ கொடுத்து வைத்தது அவ்வளவு தான்..!!

பேராசை இல்லாத உன்னை
வாழ்த்திவிட்டு

 நான் ஐந்தாம் தலைமுறை இணையத்தில் உலக வலசை செல்கிறேன்...

இறக்கும் வரை பற..!
வாழ்த்துக்கள்