புள்ளினங்கால்...புள்ளினங்கால்..
நீ
எடுத்துச் செல்ல ஏதுமில்லை உனக்கு..!
சேர்த்து வைக்க தேவையில்லை உனக்கு !
பார்த்துக் கொள்ள உறவுமில்லை உனக்கு !
பழசை எண்ணி கவலையில்லை உனக்கு !
வலசை போகும் போது இளையராஜா பாட்டு இல்லை உனக்கு !
நீ கொடுத்து வைத்தது அவ்வளவு தான்..!!
பேராசை இல்லாத உன்னை
வாழ்த்திவிட்டு
நான் ஐந்தாம் தலைமுறை இணையத்தில் உலக வலசை செல்கிறேன்...
இறக்கும் வரை பற..!
வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment