Monday, November 20, 2023

பூக்காரி


பூக்களை 

விற்கிறதே ...

ஓவியமொன்று 

==================

வாசமில்லா 

வாழ்விற்கு 

வைத்திருக்கிறாயா 

வாசமுள்ள 

மலர்களை !

==================

பூவொன்று 

பூவேந்தி 

நிற்பதால்தானோ 

இதனை 

பூவுலகு 

என்கிறார்கள் !!

==================

எதை 

விற்கிறாய் ...

பூவையா ?

பூ நகையையா ?

==================

ரோஜா 

மலரென்று 

வேறெதையோ 

தருகிறாயே ...

எப்படி 

வாங்கிக்கொள்வது !

==================

தாமரை 

இல்லையென்று 

பொய் 

சொல்கிறாய் ..

தாமரை 

இதழால் !

==================

கூடை 
பூக்களை 
வண்டு 
மொய்க்காதல்லவா ..
பூவை
நீ 
இருக்கும்போது !

==================

உன்னை 

விட்டு 

பிரிந்தால் 

வாடி விடாதா 

கூடை 

பூக்கள் !

==================

கடந்து 

போகின்றன ..

எத்தனையோ 

அந்தி 

மாலைகள் !!

==================

கையில்

பூக்களோடு

எந்த

மாலைக்காக

காத்திருக்கிறாய்!

==================

மாலை 

வந்தால் 

வாடிவிடுமோ 

பூக்கள்

என்று 

அஞ்சாதே !!

==================

மாலை 
தொடுத்துவிடு ..
மணத்தோடு 
கொள்கிறேன் ...
பூக்களை !

==================


Friday, November 3, 2023

கண்ணன்

கோதை மலர்களை தந்தாள் ...

சபரி கனிகளை  தந்தாள் ...

மீரா இசையை  தந்தாள் ...

குசேலன் அவலை தந்தான் ...

கர்ணன் புண்ணியத்தை தந்தான் 

என்னிடம் 

என்ன

எதிர்பார்க்கிறாய்  !!?

=================================

உறவுப்பாலத்தை

சொல்லெனும் 

குண்டால் 

தகர்ப்பதும்

காதல் 

பயங்கரவாதம்தான் !!

=================================

பார்வை நேரத்தில் 

மருத்துவர்கள் 

நோய் தீர்க்க 

முனைகிறார்கள் ...


உனது 

பார்வை 

நேரத்தில்தான் 

எனக்குள் 

நோயையே 

'விதைக்கிறாய் !

=================================

எனது 
கவிதை 
புத்தகத்தில் ...
எழுதப்பட்ட 
சில பக்கங்கள் ..
வரையப்பட்ட 
சில பக்கங்கள் ..
வண்ணமயமான 
சில பக்கங்கள் ..
கிறுக்கப்பட்ட 
சில பக்கங்கள் ..
கிழிக்கப்பட்ட 
சில பக்கங்கள் ..

நீ 
எந்த பக்கம்?

=================================