Monday, November 20, 2023

பூக்காரி


பூக்களை 

விற்கிறதே ...

ஓவியமொன்று 

==================

வாசமில்லா 

வாழ்விற்கு 

வைத்திருக்கிறாயா 

வாசமுள்ள 

மலர்களை !

==================

பூவொன்று 

பூவேந்தி 

நிற்பதால்தானோ 

இதனை 

பூவுலகு 

என்கிறார்கள் !!

==================

எதை 

விற்கிறாய் ...

பூவையா ?

பூ நகையையா ?

==================

ரோஜா 

மலரென்று 

வேறெதையோ 

தருகிறாயே ...

எப்படி 

வாங்கிக்கொள்வது !

==================

தாமரை 

இல்லையென்று 

பொய் 

சொல்கிறாய் ..

தாமரை 

இதழால் !

==================

கூடை 
பூக்களை 
வண்டு 
மொய்க்காதல்லவா ..
பூவை
நீ 
இருக்கும்போது !

==================

உன்னை 

விட்டு 

பிரிந்தால் 

வாடி விடாதா 

கூடை 

பூக்கள் !

==================

கடந்து 

போகின்றன ..

எத்தனையோ 

அந்தி 

மாலைகள் !!

==================

கையில்

பூக்களோடு

எந்த

மாலைக்காக

காத்திருக்கிறாய்!

==================

மாலை 

வந்தால் 

வாடிவிடுமோ 

பூக்கள்

என்று 

அஞ்சாதே !!

==================

மாலை 
தொடுத்துவிடு ..
மணத்தோடு 
கொள்கிறேன் ...
பூக்களை !

==================


No comments:

Post a Comment