Friday, November 3, 2023

கண்ணன்

கோதை மலர்களை தந்தாள் ...

சபரி கனிகளை  தந்தாள் ...

மீரா இசையை  தந்தாள் ...

குசேலன் அவலை தந்தான் ...

கர்ணன் புண்ணியத்தை தந்தான் 

என்னிடம் 

என்ன

எதிர்பார்க்கிறாய்  !!?

=================================

உறவுப்பாலத்தை

சொல்லெனும் 

குண்டால் 

தகர்ப்பதும்

காதல் 

பயங்கரவாதம்தான் !!

=================================

பார்வை நேரத்தில் 

மருத்துவர்கள் 

நோய் தீர்க்க 

முனைகிறார்கள் ...


உனது 

பார்வை 

நேரத்தில்தான் 

எனக்குள் 

நோயையே 

'விதைக்கிறாய் !

=================================

எனது 
கவிதை 
புத்தகத்தில் ...
எழுதப்பட்ட 
சில பக்கங்கள் ..
வரையப்பட்ட 
சில பக்கங்கள் ..
வண்ணமயமான 
சில பக்கங்கள் ..
கிறுக்கப்பட்ட 
சில பக்கங்கள் ..
கிழிக்கப்பட்ட 
சில பக்கங்கள் ..

நீ 
எந்த பக்கம்?

=================================


No comments:

Post a Comment