எப்போதும்
தலைகுனிந்தே
நடக்கும்
உன்
முகம் காண
காத்திருக்கிறேன்
கோபுரத்தருகே ...
நிமிர்ந்து
பார்த்து
கும்பிடாமலா
போய்
விடுவாய் !!
====≈============
நாத்திகனாகத்தான்
இருநதேன்...
கோபுர வாசலில்
உன்னை
காணும்வரை !!
=========================
ஊதுவத்தியில்
ரசாயனம்
கலக்கிறார்களாம்...
பாவம்
கடவுள்!!
==========================
கோவில் யானைக்கு
மதம்
பிடித்தது...
எந்த
மதமென்று
யாருக்கும்
தெரியவில்லை!!
======================
கண்ணில்
தெரியாத
ஒன்றை
கடவுள்
என்கிறாய் ...
கண்ணில்
தெரியும்
என் காதலை
ஏன்
மறுக்கிறாய்!??
==================
இறப்புக்கு பின்
இறைவன்
இல்லையென்றால்
பிரச்சினையில்லை ...
இருந்து
விட்டால் ...
கடைசி
பெஞ்சில்
உட்கார
வைத்து
விடுவானோ !!
=================
மனிதன்
மட்டுமல்ல ...
சில
ஜாதி
பூக்களும்
இன்னமும்
வெளியேதான் !!
=================
இன்னமும்
புரியவில்லை ..
நீ
என்
பாவமா ...
புண்ணியமா !!
==============
ஒவ்வொரு
அணுவிலும்
இருக்கிறானாமே
இறைவன் ...
எனது
ஒவ்வொரு
அணுவிலும்
அவனா ...
நீயா !
=============
காமத்தின்போது
தெரியாத
அருவருப்புகள்
அவள்
காதலோடு
சமைக்கும்
உணவில்
கிடக்கும்
ஒரு
தலைமுடியில்
தெரியும்!!
=========================