ஒரே ஒரு
பட்டாம்பூச்சியைத்தான்
பார்த்தேன்
தோட்டத்தில் ...
இறக்கை
கட்டி கொண்டன
நினைவுகள் !!
==============
இரண்டே
நிறம் கொண்ட
மனிதர்களிடையே
எத்தனை
நிறவெறி ...
பல வண்ணங்களுடன்
நிறவெறியை
உன் இனம்
எப்படி
சமாளிக்கிறது
பட்டாம்பூச்சியே !!
ஒவ்வொருவரும்
தனி
இனமோ ?
========
உன்னை
துரத்தித்தான்
ஓட
கற்றுக்கொண்டேன் ..
இன்னமும்
நிற்க
முடியவில்லை !!
==========
சோம்பேறி
பிரம்மன் ...
ஒரு
சிறகினை
படைத்துவிட்டு
இன்னொன்றினை
செராக்ஸ்
எடுத்து
விட்டானே !
==============
நினைவுகள்
உன்னைப்போல
சுதந்திரமாய்
பறக்க ...
சிறைப்பட்டு
கிடக்கிறேன்
நான் !!
==============
எங்கே
பிடித்தாய்
இந்த
ஏழு வண்ண
சிறகினை ...?
என்
நினைவு
சிறகுகளுக்கு
எப்போதுமே
ஒரே வண்ணம்தான் !!
==============
தேடாதே !
எந்த
பூவிலும்
காணமாட்டாய் ...
என்னவளின்
வாசம் !!
==============
உன்னை
போல அல்ல ...
ஒரே ஒரு
பூவின்
நினைவுகளை
நுகர்வதிலேயே
சமாதானமாகி
விடுகிறது
எனது
மனது !!
===========
எனது
கவிதை
புத்தகத்தையே
சுற்றி
வருகிறது
ஒரு
பட்டாம்பூச்சி ...
அவளை
பற்றி
மட்டுமே
எழுதியதால் !!
==========
உன்னை
பார்க்கும்போதெல்லாம்
தோன்றி
போகிறது ...
குழந்தையாகவே
இருந்திருக்கலாம் !!
============
புதிய
வண்ணங்களை
பின்னி
மீண்டும் மீண்டும்
வருவாயா ...
நான்
புதிது புதிதாய்
கவிதை
பின்ன
வேண்டும்
No comments:
Post a Comment