Monday, December 30, 2024

தென்றல்

சற்றே 

வெட்கத்துடன் 

வீசுகிறது 

தென்றல் ...


உன்னை 

தழுவி 

வந்ததோ !!


================================


தென்றலே 

கொஞ்சம் 

கேட்டு சொல்லேன் ...


பட்டாம் பூச்சி 

மலரின் காதில்  

சொன்ன 

கவிதையை !


=================================


பொன்வண்டாய் 

பிறக்கிறேன்  ...


சிறு பிள்ளை 

விளையாட்டாய் 

தீப்பெட்டியிலாவது 

சிறையெடுத்துவிடு !!


================================


அழகாகத்தான் 

இருக்கிறது ...

உன்னை நினைத்து 

எழுதிய கவிதையும்..


காதலிக்க 

தொடங்கிவிட்டேன் ...

அந்த 

கவிதையையும் !!


=======================


நிலவு 

வீணை 

மீட்டினால் 

நான் 

எதை 

ரசிப்பது !!


========================


மறக்கத்தானே 

சொன்னாய் ...


எனக்கென்னவோ 

ற வுக்கு பதில் 

ரி யே 

ஒலித்துக்கொண்டிருக்கிறது !!


இரண்டும் 

ஒன்றுதானே !!

========================


கண் விழிக்கவே 

பிடிப்பதில்லை ...


கனவில்தான் 

நீ 

ஏதேதோ 

கதைக்கின்றாயே !!


=========================


புயல்

என்ன செய்து விடும் !!?


தென்றலல்லவா 

எதையெல்லாமோ 

கவர்ந்து 

போகிறது !!


=========================


ஒவ்வொரு 

கவிதைக்கு 

முன்னும் 

பின்னும் 

மாத்திரையாய் 

போட்டு கொள்கிறேன் ...


உனது 

நினைவுகளை !!


=========================


உன் 

மௌனம் கூட 

பிரளயத்தை 

பிரசவிக்கிறது 

என் இதயத்தில் ...


என் 

சொல்லாவது 

அசைக்கிறதா 

உன் 

இதயத்தை !!

========================

No comments:

Post a Comment