சற்றே
வெட்கத்துடன்
வீசுகிறது
தென்றல் ...
உன்னை
தழுவி
வந்ததோ !!
================================
தென்றலே
கொஞ்சம்
கேட்டு சொல்லேன் ...
பட்டாம் பூச்சி
மலரின் காதில்
சொன்ன
கவிதையை !
=================================
பொன்வண்டாய்
பிறக்கிறேன் ...
சிறு பிள்ளை
விளையாட்டாய்
தீப்பெட்டியிலாவது
சிறையெடுத்துவிடு !!
================================
அழகாகத்தான்
இருக்கிறது ...
உன்னை நினைத்து
எழுதிய கவிதையும்..
காதலிக்க
தொடங்கிவிட்டேன் ...
அந்த
கவிதையையும் !!
=======================
நிலவு
வீணை
மீட்டினால்
நான்
எதை
ரசிப்பது !!
========================
மறக்கத்தானே
சொன்னாய் ...
எனக்கென்னவோ
ற வுக்கு பதில்
ரி யே
ஒலித்துக்கொண்டிருக்கிறது !!
இரண்டும்
ஒன்றுதானே !!
========================
கண் விழிக்கவே
பிடிப்பதில்லை ...
கனவில்தான்
நீ
ஏதேதோ
கதைக்கின்றாயே !!
=========================
புயல்
என்ன செய்து விடும் !!?
தென்றலல்லவா
எதையெல்லாமோ
கவர்ந்து
போகிறது !!
=========================
ஒவ்வொரு
கவிதைக்கு
முன்னும்
பின்னும்
மாத்திரையாய்
போட்டு கொள்கிறேன் ...
உனது
நினைவுகளை !!
=========================
உன்
மௌனம் கூட
பிரளயத்தை
பிரசவிக்கிறது
என் இதயத்தில் ...
என்
சொல்லாவது
அசைக்கிறதா
உன்
இதயத்தை !!
========================
No comments:
Post a Comment