Saturday, April 26, 2025

இளையராஜா

 இளையராஜாவை 

படைத்தபின்புதான் 

நான் 

சிறந்த படைப்பாளி 

என்று 

எனக்கே 

திமிர் வந்தது 

     -- ப்ரம்மா 


=================

பூவுலகிற்க்கு 

நல்லிசை வழங்க 

தனது 

வீணையை 

இளையராஜா 

என்ற 

பெயரில் 

அனுப்பியது 

கலைவாணி


==================

தனது 

குழந்தையை 

பிறர் புகழும்போது 

தாய்க்கு 

ஒரு பெருமிதம்  வருமே ...


ஒரு அற்புத 

குழந்தையை 

பெத்த தாயே 

இப்படி என்றால் ...


இளையராஜாவுக்கு தான் 

எத்தனை இசை குழந்தைகள் ..?

ஒவ்வொரு 

பாடலையும் 

நாங்கள் கொண்டாடி 

தீர்க்கிறோம் ...

இளையராஜாவுக்கு 

பெருமிதம் 

வராதா என்ன ?


அதை 

கர்வம் என்றால் 

என்ன சொல்வது  ?

No comments:

Post a Comment