Tuesday, April 1, 2025

சித்திரப்பூ சேலை


மீன் கடிக்கும் 

மெல்லிதழை ...

நான் கடித்தால் 

ஆகாதா !!

தேனின் ருசி 

தெரிந்தவன் நான்

தேனீயாய் மாறேனா !!


மஞ்சள் பூசும் 

இடமெல்லாம் 

என் மனம் பூசல் 

ஆகாதா !

கொஞ்சம் என்னை 

குங்குமமாய் 

குழைத்தெடுத்தால் 

வாறேனா !


படிக்கட்டில் 

ஏறி வரும் 

பாதத்தெழில் 

பாரப்பதற்கு 

படிக்கட்டின் 

இடையிலோர் 

பலகையாய் 

மாறேனா !


முக்காலும் 

துணி மறைத்து 

உன் சொக்காயை 

இடுகையிலே 

சொக்காகி 

மூலை 

சுவராகி போவேனா !!


No comments:

Post a Comment