மீன் கடிக்கும்
மெல்லிதழை ...
நான் கடித்தால்
ஆகாதா !!
தேனின் ருசி
தெரிந்தவன் நான்
தேனீயாய் மாறேனா !!
மஞ்சள் பூசும்
இடமெல்லாம்
என் மனம் பூசல்
ஆகாதா !
கொஞ்சம் என்னை
குங்குமமாய்
குழைத்தெடுத்தால்
வாறேனா !
படிக்கட்டில்
ஏறி வரும்
பாதத்தெழில்
பாரப்பதற்கு
படிக்கட்டின்
இடையிலோர்
பலகையாய்
மாறேனா !
முக்காலும்
துணி மறைத்து
உன் சொக்காயை
இடுகையிலே
சொக்காகி
மூலை
சுவராகி போவேனா !!
No comments:
Post a Comment