Friday, December 19, 2025

கோலம்

 🍁

கோலமாவால் 

வெறும் 

புள்ளிகளையும் 

கோடுகளையும் 

வைத்தே 

கவிதை 

எழுதி விட்டாய் !


எதை 

எழுதுவது 

என்று 

திகைக்கிறது 

எனது 

தமிழும் 

எழுத்தாணியும் !!

🍁

ஒரு ஓவியம்

புவியில்

கவிதை எழுதுவதை

வியந்து பார்க்கிறது 

நிலா!.

🍁

இந்த வார

பட்டிமன்ற 

தலைப்பு .....

எந்த 

நாளில்

உனது

கோலம் அழகு !!?

தீர்ப்பு

காலவரையின்றி

ஒத்தி வைக்கப்பட்டது!!

🍁

நிலம் 

ஏன் அதிர்கிறது?

நீ 

பொட்டு வைப்பதால் 

சிலிர்க்கிறதோ 

பூமி?

🍁 

எப்படி

சம்மதித்தது

கோலமாவு...?

உன் 

விரல்களை விட்டு

இறங்குவதற்கு!!

🍁

கோலம்

எப்படி 

என்கிறாய்!!

எந்த

கோலத்தை

ரசிப்பது

நான்?

***********???**
எனக்குத்தான் 
தெரியுமே...
உனது
கோலத்தை
ரசிக்க
இருவிழி
போதாதென்று!!
***************(*******
உயிர் காக்க
அழைக்கிறான்
மார்க்கண்டேயன் ...

எப்படி
தாண்டி
போவது...?

இந்த
கோலத்தை?
***********************
உன்
காதலால்
நேரான
கோடுகள்
ஆங்காங்கே
வளைகிறதே
நாணத்தால்!!
*******************
கோலமிட்டு 
விட்டாயா?

உதிப்பதற்கு
உத்தரவு
கேட்கிறான் 
சூரியன்!
************************
உன்
கோலத்தை
நகலெடுக்க 
வானில்
நட்சத்திர 
புள்ளிகளை
வைத்துவிட்டு
ஒளிந்து
பார்க்கிறது
நிலா!!
********************
நீ
கோலம்
போட்டதால்தானோ
இதனை
புண்ணிய பூமி
என்கிறார்கள்!!?
***************************
நீ
கோலமிட்ட 
பூமி
இனி ...

கோள வடிவா!?
கோல வடிவா!?
********************
 
எறும்புகளுக்கு
பசிக்குமென்று
அரிசிமாவால்
கோலமிடுகிறாய்!!

உன் கோலத்தை
கலைக்க
மனமின்றி
பசியடக்கும் 
வரம் கேட்கின்றன
எறும்புகள்!!
***********************

No comments:

Post a Comment