Thursday, November 22, 2012

மாறன் செய்த காயம்


கொத்து கொத்தாய்  மலர்கள் 
பூஜைக்கு போவதேதோ !!
முத்து முத்தாய் ஆசைகள் 
என் காதலும் அது போல் தானோ !!!

விழியோரம் தினம் தினம் 
உலா வரும் கரு மேகங்கள் !!!
தோழி உனக்கு புரியாதோ 
என் மனதின் தாபங்கள் !!!

பனித்துளி சுமக்கும் மலர்கள் 
பகலவன் வரும் வரை !!
நீர்த்துளி சுமக்கும் விழிகள் 
தோழி நீ வரும் வரை !!

புரிந்தும் பாரா  முகமாய்
புறக்கண் காட்டும் உன் மாயம் !!
தெரிந்தும் தொடருது என் நினைவு 
இது மாறன் செய்த காயம் !!

No comments:

Post a Comment