Friday, November 23, 2012

விடியல் காத்திருப்பதில்லை


என்னை விட உன்னை நேசித்தவருண்டு 
உன்னை விட என்னை எவரும் நேசித்ததில்லை !!!

உன் தேவைகள் யதார்த்தமானவை ..
என்  உணர்வுகள் புரிந்து கொண்டன - தாமதமாய் !!!!

அக்கரை  ஒன்றும் தூரமில்லை ...
அதிக தூரம் வந்துவிட்டேன் !!!

லாபம் இன்றி ஏது வியாபாரம் ....
காரணம் வாழ்க்கை இங்கு ஆதாரம் !!!!

இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை ...
வழக்கிட இனி மனதும் இல்லை  !!!!!

என்னோடு வர உனக்கு விருப்பமில்லை - ஆனால் 
எனக்கு விருப்பமில்லை நீ தனித்திருப்பதில் !!!

தோற்பது யாராக இருந்தாலும் ....
ஜெயிப்பது நீயாக இருக்க வேண்டும் !!!!

ஒன்றை இழந்தால்தான் மற்றொன்று ....
எதை இழந்தேன் என்று புரியவில்லை !!

வாள் பட்ட காயம் கூட ஆறிவிடும் ...
நாள் பட்ட விதை முளைப்பதில்லை !!!

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு ....
உணர்வுகளை மீறினால் வாழ்வும் நஞ்சு !!!

நீ நீயாக இருக்க  ...
நான் நானாகவே இருக்கிறேன்  !!!!

பொருந்தாத காலத்தில்  .....
நீங்காத நினைவுகள் !!!!!!!

உதிர்ந்து  போன சருகாய்  ...
கலைந்து போன கனவுகள் !!!!

நான் ஒன்றும் பினிக்ஸ் பறவை அல்ல ...
சாம்பலில் இருந்து எழ !!!!

நெருங்கி வருகிறது ....
விடியல் அல்ல ... அஸ்தமனம் !!!

மீண்டும் விடியலாம் ..... ஆனால் ..
விடியல் காத்திருப்பதில்லை !!!!

No comments:

Post a Comment