Thursday, November 22, 2012

கனவு நாயகியே


கனவு   நாயகியே 
கண் திறந்து நீயும் பார் 
பார்க்காமல் போவதுவும் ஏனோ 
பரிதவிக்கிறேன் தினம் நானும் 

அன்று நீ காணாத   காற்று 
இன்று நீ எங்கள் இதயத்தின் நாற்று 
போராடி போராடி தோற்று 
போதும் இனியாவது  மனதை மாற்று 

விரும்பிய வாழ்க்கை தனை தேடி 
திரும்பிய பக்கமெல்லாம் ஓடி 
அரும்பியதே ஆசைகள் கோடி 
இரும்போ உன் மனது என் சேடி 

கடல் கடந்து போனவனுக்கு  
விரல் கடக்க துணிவில்லை 
விரல் நுனியில் உலகமாம் 
நிழல் கூட எனதில்லை 

கணினியில் மோகம் கொண்டு 
கானல் நீரில் நனைந்து 
மனம் ஏங்கும்  மோனத்தில் 
கனல் மூட்டுது இதயத்தில் 

இல்லத்தில் நீ இருந்தால் 
அல்லல்  வர அஞ்சுமே 
வெல்லத் தமிழில் கொஞ்சம் 
மெல்லச்  சொல் நீயே தஞ்சம் 

தளர்ந்து போனது மனது 
முதிர்ந்து போனது உடம்பு 
உதிர்ந்து போகும் நிலையிலும் 
அயர்ந்து போகாது உணர்வு 

துள்ளி எழும்  நாளில் 
வெள்ளியாய் நீ இருந்தாய் 
துவண்டு விழும் நாளில் 
தோளோடு சாய்ந்து விடு 

வட்டமிட்டு போகும் மேகம் 
முத்தமிட்டு போகுது நிலவை 
சத்தமின்றி நான் அடங்கும்முன் 
சொத்தாய் நீ வந்து விடு 

No comments:

Post a Comment