முள்ளில் நடந்தபோது
தூக்கமின்றி உழைத்தபோது
தினசெலவிற்காய் தவித்தபோது
எதிர்காலத்தை நினைத்து அயர்ந்தபோது
பகிர்ந்து கொள்ள பசியை தவிர வேறில்லை என்று மயங்கியபோது
.....
.....
என்னோடு வருவேன் என்றாய் ....!!
......
......
கூடொன்று அமைத்து
உனக்கே உனக்கென்று ஒவ்வொன்றாய் வாங்கி சேர்த்து
எதிர்காலம் உனக்கென்று நினைத்து
வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள துடித்தபோது
......
......
ஏனிந்த மயக்கம் ....?
எதற்கிந்த தயக்கம் ....?
......
......
மலர்பாதையும் முள்பாதை ஆனது ...
தூங்கா இரவுகள் மீண்டும் வாட்டுது ....
.....
.....
இப்போதும் ... ஓன்று மட்டும் புரிகிறது ....
எதிர்காலம் நீ ..மட்டுமே ..!!!!
No comments:
Post a Comment