மலர்களால் பாதை விரித்தது தென்றல்
மலர் கிண்ணத்தில் தேன் கொண்டு வந்தது மேகம்
மலர் மாலையோடு காத்திருந்தது வண்ண மயில்
மண்ணில் மலர்ந்த தேவதையின் வாசத்தை
விண்ணில் தேடியது நிலா
விடை பெறும்போதும்
தவித்து போனது வசந்த காலம்
மலரில் தேனை உண்டு
நினைவுகளை தூண்டி விட்டு
கடந்து போனது ஒரு வண்டு
காதல் பாதையில் விரித்த மலர்களும்
கடந்து போகும் ஒவ்வொரு நாளும்
கேட்டு கேட்டு சலித்தன
விதையாய் விழுந்தது
வாழ்கையாய் ஆனது
இயற்கையின் நியதி இது
இயல்பாய் சிரித்தது விதி
இதயம் துடிக்கும் வரை
துடிக்கும் உன் நினைவுகள்
No comments:
Post a Comment