எல்லாம் முடிந்து
தனியே விட்டுப் போனாய் ....
அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை,
தீபம் எல்லாம் முடிந்து, கடவுளை
தனியே விட்டு போகும்
அர்ச்சகர் போல !!
===================================
ஒன்றிய காதலி
காதலை சொல்ல
ரோசாவை நீட்டினேன்
ஆதார் ஐ காட்டு என்றாள்!
திராவிட காதலி
காதலை சொல்ல
ரோசாவை நீட்டினேன்
கறுப்பு ரோசா
வேண்டுமென்றாள்!!
=================================
ஜாலம் காட்டும் பாவை விரல்கள்
புவியின்மீது நடனம்
வர்ண ஜாலம் காட்டும்
அழகு கோலம் ஜனனம்
===============================
க்ரைம் சைபர் ஆக வேண்டும்
என விரும்பியது அந்த காலம்
சைபர் க்ரைம் உருவாகி
மிரட்டுவது இந்த காலம்
=================================
No comments:
Post a Comment