Tuesday, August 31, 2021

தனிமை

கொஞ்சல், சிணுங்கல், ஊடல், கூடல் 
எல்லாம் முடிந்து
தனியே விட்டுப் போனாய் ....

அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை,
தீபம் எல்லாம் முடிந்து, கடவுளை
தனியே விட்டு போகும்
அர்ச்சகர் போல !!

===================================

ஒன்றிய காதலி 
காதலை சொல்ல
ரோசாவை நீட்டினேன்
ஆதார் ஐ காட்டு என்றாள்!

திராவிட காதலி
காதலை சொல்ல
ரோசாவை நீட்டினேன்
கறுப்பு ரோசா
வேண்டுமென்றாள்!!

=================================

ஜாலம் காட்டும் பாவை விரல்கள்
புவியின்மீது நடனம்
வர்ண ஜாலம் காட்டும்
அழகு கோலம் ஜனனம்


===============================

க்ரைம் சைபர் ஆக வேண்டும்

என விரும்பியது அந்த காலம்

சைபர் க்ரைம் உருவாகி 

மிரட்டுவது இந்த காலம்

=================================

No comments:

Post a Comment