Thursday, October 28, 2021

மழை

கார்மேகத்திற்கும்
உன் மீது
காதல் போல
உனக்கு ஏன் சிரமமென்று
சாரலாய்
வாசல் தெளித்து 
போயிருக்கிறது
அதிகாலையில் !!

விட்டு விட்டு பெய்யும் மழை போல
நெஞ்சை தொட்டு தொட்டு செல்கிறது
உன் நினைவு

உன் பார்வை மழை விழுந்ததால்
எனக்குள் பெருக்கெடுக்கிறது 
காதல் வெள்ளம்

என்
இதயப்பறவையின் 
வேடந்தாங்கல்
நீ

வான் சிறப்பில்
வள்ளுவன் எழுதாத குறள்...
நீ
மழையில் நனைவது!

நீ குடையை மறந்த செய்தியை 
வானிலை அறிக்கையில் 
சொல்லி விட்டார்களா என்ன ...
உன்னை தொட்டு பார்க்க
வந்து விட்டதே 
மழை !

உன்னை நனைக்கும்
ஒவ்வொரு துளியும் 
பீற்றிக் கொள்கிறது...
தன்னை தீர்த்தமென்று!

No comments:

Post a Comment