Saturday, November 13, 2021

மழை

குழந்தையின் 
காகித கப்பல்
அழகாகத்தான் இருக்கிறது ...
எனது 
காகித கிறுக்கல்களை விட!

குடைக்குள்
பருவ மழை

காதல் காய்ச்சல் ...
உன்
பார்வை மழையில்
நனைந்த எனக்கு!

நிலா என்னும்
நெற்றி சுட்டி அணிந்து
நட்சத்திர பூக்கள் சூடி
எந்த காதலனுக்காக
தன்னை 
அலங்கரித்து கொள்கிறது
வானம்!?

பிரம்மனின் ஓவியம்
வருணனின் மழையில்
காமனின பாணம்
அக்னியாய் நெஞ்சில்


காத்திருக்கும்போதெல்லாம் 
கண்ணீர்விட வைக்கிறாய் ...
எதிர்பாரா வேளையில் 
இன்ப சாரலில் நனைக்கிறாய் ...
அமைதியாய் இருந்தால் 
விழி மின்னலில் எரிக்கிறாய் ...
பாராமல் போனாலோ 
வார்த்தையில் இடியாய் வெடிக்கிறாய் ..
இனித்தாலும் 
எரித்தாலும் 
நீ வந்தால்தானே 
பூக்குது 
என் காதல் வனம் !!



No comments:

Post a Comment