Thursday, October 7, 2021

வான் மழை

 உந்தன் காதல் மழை 

வஞ்சித்தது போல் 

வான் மழை 

வஞ்சிக்கவில்லை ...

வந்து போகிறது 

எப்போதாவது !


ஜன்னலோரத்தில் 

தலையை சிலுப்பி 

கீச்சு குரலில் சப்தமெழுப்பி 

காலை தூக்கத்தில் 

தினம் 

எழுப்பி விடுகிறது 

ஒரு சிட்டு குருவி ...

நான் அதை விரட்டுவதில்லை ...

என்றாவது ஒரு நாள் 

உன் காதலை கொண்டு வருமோ ..!!!!!


கார்மேகத்தில் மறைந்த நிலா 

எப்போ வரும் என்று 

ஆவலோடு பார்க்கிறது 

குழந்தை ....

நிலா ஏமாற்ற போவதில்லை ....

நீ ...!!!!


ஆண்டுகள் கடந்தாலும் 

மழை 

மழையாகவே இருக்கிறது ..

என் 

காதலை போல !!


மனிதா !

உன் மகனோ மகளோ 

தன் காதலியோடோ காதலனோடோ 

கை கோர்த்து 

காதலில் திளைத்து 

நடப்பதற்காகவேனும்  

புல் தரை வேண்டுமல்லவா ...

அதற்காகவேனும் 

விட்டுவிடு 

பூமியை பசுமையாய் !!




ஓட்டுப்போட வீட்டிற்கு ரெண்டாயிரம் 

கொடுக்கிறர்களாம் ....

செய்தித்தாளில் செய்தி !!

உங்கள் ஓட்டு 

எங்களுக்கே என்ற வாசகத்தோடு 

இரு நூறு ரூபாயோடு 

கவர் ஒன்று கிடந்தது 

தேர்தல் நாள் அதிகாலையில் 

வீட்டு வாசலில் ...!!

நீங்களே சொல்லுங்கள் 

ஜன நாயகம் 

செத்து விட்டதா இல்லையா !!



மலையை வெட்டி

மரத்தை வெட்டி

மண்ணை வெட்டி

ஆத்த மூடி

அணையை மூடி

குளத்தை மூடி

ஏரியை மூடி

மல்லாந்து படுத்து 

யோசித்தான் மனிதன் ...

ஏன் இயற்கை கண் 

திறக்கவில்லை !!


சிலர் ஓடி ஒளிகிறார்கள் 

சிலர் நனைகிறார்கள் 

சிலர் குடை பிடிக்கிறார்கள் 

நான் குடை பிடிக்கவில்லையே 

ஓடி ஒளியவில்லையே 

ஏன் 

நனைக்காமல் போனாய் !

No comments:

Post a Comment