Sunday, August 21, 2022

ஆசைத்தெரு

 கோடை குளிரா, குளிரின் கோடையா 


சித்திரையும் 

தேடுகிறது 

நீ 

காதலால் விசிறி விட ...

மார்கழியும் 

தேடுகிறது 

நீ 

காதலால் போர்வை  இட ...


மிச்சமும் நீயே 


உன் 

கண்ணீரை துடைக்க 

ஒன்றே 

ஒன்று மட்டுமே 

மிச்சம் இருக்கிறது 

என்னிடம் ....

எனது காதல் !


காதல் அடகு கடை 


என் 

வாழ்வையே 

வட்டியாக 

கட்டி விட்டேன் ... 

திருப்பவே  முடியவில்லை 

அவள் மீது 

வைத்த பார்வையை கூட !


ஆசைத்தெரு 


எப்படி 

பெயர் வைத்தார்கள் 

நீ 

இருக்கும் தெருவிற்கு 

புத்தர் தெரு என்று ...

அந்த வீதியில் 

நுழைந்தால்தான் 

ஆசையே வருகிறது !


வைரப்புன்னகை 


சில்லறையை 

கொட்டியவர்கள் கூட 

அள்ளிகொண்டு போகிறார்கள் 

நீ எப்படி 

புன்னகையால் 

வைரங்களை சிதறவிட்டு 

அலட்சியமாக போகிறாய் !


காதல் லாக் 


என் 

இதயத்திற்கு எப்படி 

பேஸ்லாக் போட்டாய் 

உன்னை 

காணும்போதெல்லாம் 

தானாக 

திறந்து கொள்கிறதே !


கவிதையும் நீயும் 


நீ 

வந்தபோது 

வாழ்வு கிடைத்தது ...

நீ 

போனபோது 

கவிதை கிடைத்தது !


காதல் முக்தி 


வேத நூல்கள் 

சொல்கின்றன 

முக்தி பெற 

ஏழு ஜென்மம் வேண்டுமாம் ...

காதல் நூல் 

சொல்கிறது 

உன் பார்வை 

போதுமாம் !


காதல் மொழி 


நீ சொல்லால் 

சொல்வதைவிட 

காதலால் சொல்வது 

சட்டென்று 

புரிந்து விடுகிறது 


காதல் தவம் 


சில ஆண்டுகள் 

தவத்திற்கே 

வரம் தருவானாம் சிவன்....

ஜென்மங்களாய் 

செய்கிறேன் 

காதல் தவம் ...

என்ன தருவாய் !


காதல் இல்லத்து அரசி 


சமாதான படுத்தவே 

முடியவில்லை ...

அடம் பிடிக்கும் 

என் 

இதயத்தை ...

உன் வீட்டில் 

வசிக்கிறாளாமே 

அதன் இல்லத்தலைவி !


எதிலும் கவிதை 


உன் 

புன்னகை மட்டுமல்ல 

உன் 

முறைப்பு கூட 

கவிதையை தான் 

சிந்த விடுகிறது ...

நான் 

என்ன செய்ய !


காதல் கொள்ளை கூட்டம் 


பார்வை 

இதழ்கள் 

கொலுசொலி 

என்று .....

ஒரு 

கொள்ளை கூட்டத்தையே 

வைத்திருக்கிறாயே 

என்னை கொள்ளை அடிக்க !


அதிவேக வாகனம் 


காதல் 

என்ற வாகனத்தை 

மட்டும் அனுப்பு ...

நொடியில் 

வந்துவிடுகிறேன் ...

நீ 

எத்தனை 

மைல்களுக்கு 

அப்பால் இருந்தாலும் !


அம்மன் ஆறாட்டு 


அம்மன் 

தானே 

ஆறாடுமா என்ன !


காதலா கவிதையா 


பயமாகத்தான் 

இருக்கிறது ...

நீ ஓருவேளை 

என் 

காதலுக்கு 

சம்மதித்துவிட்டால் ..

கவிதை எழுதுவதை 

நிறுத்திவிடுவேனோ !


காதல் தும்மல் 


நேற்று மாலை 

கண்டபடி 

தும்மல் வந்ததென்றாள் ...

வேறொன்றுமில்லை 

நான்தான் 

உன்னை 

கண்டபடி 

நினைத்து கொண்டேன் !


அசுர காதல் 


காதலிக்கிறேன் 

என்று 

சொல்லும் முன்  ...

கொஞ்சம் யோசித்துவிடு ...

என் 

காதலை தாங்கும் சக்தி 

உன் 

பிஞ்சு இதயத்திற்கு 

உண்டா என்று !


கைராசி 


நீ 

பாகற்காய் தானே 

விதைத்தாய் ...

எப்படி 

முளைத்தது 

கரும்பு !


காதல் தலைப்பு 


சேலைக்கு 

தலைப்பு வைத்திருக்கிறாய் 

நீ ...

உனது 

சேலை மூடியிருக்கும் 

கவிதைக்கு 

தலைப்பு தேடி 

திணறி போகிறேன் 

நான் !


காதல் வளர்ச்சி 


நேற்றுதானே 

பிறந்தாய் ...

என் இதயத்தில் ...

அதற்குள் எப்படி 

வளர்ந்தாய் இப்படி !


காதல் எச்சரிக்கை 


ஒரு 

எச்சரிக்கை பலகை கூட 

இல்லையே 

உன் வீட்டருகில் ...

கவனம் 

காதலில் 

வீழ்ந்து விடுவீர்கள் !


காதல் விளையாட்டு 


சிரமப்பட்டு 

சேர்த்து வைக்கிறேன் 

என் 

இதயத்தை ...

சர்வ சாதாரணமாக 

சிறு பார்வையில் 

கலைத்து போட்டு 

விடுகிறாய் !


காதல் அழகி  


ரதி ஒன்றும் அழகில்லை 

என் 

காதலால் 

அலங்கரித்து பார் 

நீ 

ரதியை விட அழகு !


காதல் நிறக்கூடு 


எனது 

காதல் நிறக்கூட்டில் 

எட்டாவது வண்ணம் 

மட்டுமல்ல 

எட்டா வண்ணம் 

இருப்பதும் 

நீதான் !


மோகம் சுமக்கும் மேகம்

 மோகம் சுமக்கும் மேகம் 


என்னை தாண்டி 

உன் ஊருக்கு வரும் 

மேகங்கள் 

தண்ணீரை மட்டுமல்ல 

என் 

கனவுகளையும் 

சுமந்து வருகின்றன !


கரும்புக்கும் குறும்பு 


கரும்பு கடிக்கும்போது 

உதடு 

கடித்துவிட்டது 

என்றாள் அவள் ....

பின்னே ...

கரும்புக்கும் 

ஆசை இருக்காதா 

தன்னை விட இனிப்பான 

ஒன்றை கடிக்க !


யார் நிலா 


அங்கே  பார் நிலா 

என்று காட்டி 

சோறூட்டினாள் அவள் ...

வியந்து அவள் 

முகத்தையே 

பார்த்தது குழந்தை !


கையோடு கவிதை 


சிறு குழந்தை 

கைக்குள் பதுக்கும் 

மிட்டாய் போல 

இன்னமும்  பதுக்கி 

வைத்திருக்கிறேன் 

ஒரு அந்தி மாலையில் 

நீ கொடுத்த 

பறக்கும் முத்தத்தை !


காதல் விளக்கு 


நீ விளக்கேற்றியபின்னும் 

சந்தேகம் தீரவில்லை ...

விளக்கை ஏற்றியது 

உன் கை தீக்குச்சி ஒளியா...

இல்லை 

உன் விழியின் ஒளியா !


காதல் மாணவன் 


மாணவனாகவே 

இருந்து விட்டு போகிறேன் ...

உன் விழி அசைவிலும் 

கொலுசொலியிலும் 

காதலை 

கற்றுக்கொள்ளும் 

மாணவனாகவே !



Thursday, August 18, 2022

வயல் காட்டு கவிதைகள்


கரும்பு காட்டு கவிதைகள்


உன் 

உயிரின் 

நிழலாய் 

நான் 


என் 

கவிதைகள் 

ஒவ்வொன்றும் 

அனாதையாகவே 

பிறக்கின்றன 

நீ இல்லாமல் !



நீயில்லா ஞாயிறு 

திங்கள் இல்லா வானமாய் 



என்னை 

சுற்றி வலை கட்டி 

ரசிக்கும் 

காதல் சிலந்தி 



தொலைந்துதான் 

போயிருக்கிறது 

என்று 

சமாதான படுத்தி கொள்கிறேன் 

மரணித்த 

என் காதலை எண்ணி 


சில காலமே ஆனாலும் 

பொய்யே ஆனாலும் 

நீ காட்டிய பிரியம் 

பத்திரமாகவே 

இருக்கிறது 

என்னிடம் ...

செல்ல குழந்தையாய் !


சிறுகதையாய் 

வாழ்வில் 

நீ வந்தாய் ...

தொடர்கதையாய் 

உன் 

நினைவுகள் !

Monday, August 8, 2022

நதிக்கரை ஞாபகங்கள்


மலை முகட்டில் 

பிறந்து 

அன்னையின் 

காலடி காண 

அடிவாரம் 

தேடி வந்தாயோ !


ஆளில்லா 

காட்டில் 

எதற்கு இந்த 

கானக கச்சேரி !


எங்கே 

கற்றுக்கொண்டாய் ...

கூழாங்கல்லை

பட்டை தீட்டும் 

வித்தையை !


பொன்னி 

நீ ஆனதாலோ 

உன் கரையில் 

பொன்னிற மணல்கள் !


நீ 

மட்டும் இல்லையென்றால் 

சருகை 

குவித்துவிடுவான்

கனல் கக்கும் 

சூரியன்  !


பூமிப்பெண்ணுக்கு  

நரம்பாய் 

நீ ஓடுவதாலோ 

தினம் சிரிக்கிறாள் 

புது பெண்ணாய்!


ஊரோடு

நீ(ர்) ஓடினால் 

ஏரோடு சிறக்கும் 

வயல் ...

சேறோடு சிரிக்கும் 

நாத்து ...

தாரோடு சிறக்கும் 

வாழை !


ஒவ்வொரு 

மாநிலமும் சொல்கிறது 

நீ 

தங்களுக்கென்று ...

நீயேன் ஓடுகிறாய் 

கடலில் 

சங்கமிக்க !


ஓடும் வரைதான் 

நீ பரிசுத்தம் ...

நின்று விட்டால் 

நீயும் சாக்கடையே !


கண்விரித்து பார்த்தேன் 

கா...விரியை ....

கவித்துளிகள் விரிந்தன 

இதய வானில் !


கானம் பாடி 

தொண்டை வற்றி 

குயிலொன்று  வருகிறது 

தாகம் தீர்க்க !

அதன் தாகத்தோடு 

தீர்த்துவிட்டு போ 

எனது 

கவிதை தாகத்தையும் !