கரும்பு காட்டு கவிதைகள்
உன்
உயிரின்
நிழலாய்
நான்
என்
கவிதைகள்
ஒவ்வொன்றும்
அனாதையாகவே
பிறக்கின்றன
நீ இல்லாமல் !
நீயில்லா ஞாயிறு
திங்கள் இல்லா வானமாய்
என்னை
சுற்றி வலை கட்டி
ரசிக்கும்
காதல் சிலந்தி
தொலைந்துதான்
போயிருக்கிறது
என்று
சமாதான படுத்தி கொள்கிறேன்
மரணித்த
என் காதலை எண்ணி
சில காலமே ஆனாலும்
பொய்யே ஆனாலும்
நீ காட்டிய பிரியம்
பத்திரமாகவே
இருக்கிறது
என்னிடம் ...
செல்ல குழந்தையாய் !
சிறுகதையாய்
வாழ்வில்
நீ வந்தாய் ...
தொடர்கதையாய்
உன்
நினைவுகள் !
No comments:
Post a Comment