Thursday, August 18, 2022

வயல் காட்டு கவிதைகள்


கரும்பு காட்டு கவிதைகள்


உன் 

உயிரின் 

நிழலாய் 

நான் 


என் 

கவிதைகள் 

ஒவ்வொன்றும் 

அனாதையாகவே 

பிறக்கின்றன 

நீ இல்லாமல் !



நீயில்லா ஞாயிறு 

திங்கள் இல்லா வானமாய் 



என்னை 

சுற்றி வலை கட்டி 

ரசிக்கும் 

காதல் சிலந்தி 



தொலைந்துதான் 

போயிருக்கிறது 

என்று 

சமாதான படுத்தி கொள்கிறேன் 

மரணித்த 

என் காதலை எண்ணி 


சில காலமே ஆனாலும் 

பொய்யே ஆனாலும் 

நீ காட்டிய பிரியம் 

பத்திரமாகவே 

இருக்கிறது 

என்னிடம் ...

செல்ல குழந்தையாய் !


சிறுகதையாய் 

வாழ்வில் 

நீ வந்தாய் ...

தொடர்கதையாய் 

உன் 

நினைவுகள் !

No comments:

Post a Comment