மோகம் சுமக்கும் மேகம்
என்னை தாண்டி
உன் ஊருக்கு வரும்
மேகங்கள்
தண்ணீரை மட்டுமல்ல
என்
கனவுகளையும்
சுமந்து வருகின்றன !
கரும்புக்கும் குறும்பு
கரும்பு கடிக்கும்போது
உதடு
கடித்துவிட்டது
என்றாள் அவள் ....
பின்னே ...
கரும்புக்கும்
ஆசை இருக்காதா
தன்னை விட இனிப்பான
ஒன்றை கடிக்க !
யார் நிலா
அங்கே பார் நிலா
என்று காட்டி
சோறூட்டினாள் அவள் ...
வியந்து அவள்
முகத்தையே
பார்த்தது குழந்தை !
கையோடு கவிதை
சிறு குழந்தை
கைக்குள் பதுக்கும்
மிட்டாய் போல
இன்னமும் பதுக்கி
வைத்திருக்கிறேன்
ஒரு அந்தி மாலையில்
நீ கொடுத்த
பறக்கும் முத்தத்தை !
காதல் விளக்கு
நீ விளக்கேற்றியபின்னும்
சந்தேகம் தீரவில்லை ...
விளக்கை ஏற்றியது
உன் கை தீக்குச்சி ஒளியா...
இல்லை
உன் விழியின் ஒளியா !
காதல் மாணவன்
மாணவனாகவே
இருந்து விட்டு போகிறேன் ...
உன் விழி அசைவிலும்
கொலுசொலியிலும்
காதலை
கற்றுக்கொள்ளும்
மாணவனாகவே !
No comments:
Post a Comment