Friday, March 31, 2023

ரதியும் வந்தாள் ...

 வாங்கும்போது 

24 காரட்தான் ....


எப்படி கணக்கிடுவது 

நீ அணிந்தபின்பு 

எத்தனை காரட் என்று !! 

===================

எதற்கு 

ஹால் மார்க் முத்திரை ...

உன் கழுத்தில் 

இருப்பதே 

தங்கத்திற்கு 

தன்னிகரில்லா 

தர முத்திரைதானே !!

======================

வெட்கி போனது 

கோஹினூர் வைரம் ...

உனது   

இதழில் துளித்த 

பனித்துளி கண்டு !!

===================

மன்மதனின் 

ரதியும் வந்தாள் ...

அவள் அழகில் 

கொஞ்சம் 

கடன் வாங்கி 

சென்றாள் !!


ஊர்வசியும் 

ஓர் நாள் வந்தாள் 

அவளுக்கு 

தோழி ஆனாள் !!

================

மல்லிகைப்பூவே 

சிவந்ததேன் ....

மனதிற்குள் என்னை 

கசந்ததேன் !!

=================

ஆனந்தம் நீராடும் நதியா 

அலைகளில் காண்பது ரதியா 

கண்ணில் விழுந்தது விதியா 

காலதேவன் செய்த சதியா 

==============================

தென்றல் நடந்தது மெல்ல 

தேனாய் கவிதைகள் சொல்ல

தேனும் விஷமாய் கொல்ல


=================================

வண்ணங்கள் கூட்டும் அங்கமோ 

மெருகேறிய அழகு தங்கமோ 

எண்ணங்கள் அதில் தங்குமோ 

என்றும் கூட வர ஏங்குமோ 

==================================

உன் செந்தூரம் காட்டும் கலை 

என் நெஞ்சோரம் வீசும் வலை 

மயங்குது கோவில் சிலை 


==================================

நீ பேசும் 

சொற்களை 

தந்தது 

தமிழோ ...

அமுதமோ !!

==================================

வலிமையோடுதான் 

எழுதுகிறேன் ...

நீ 

தந்த வலி 

என் 

பேனாவுக்கு ஊற்றிய 

மையோடு !

=================================

ஒரே ஒரு 

வரம்தான் 

கேட்பேன் கடவுளிடம் ...

உன்னோடு இருந்த 

கடந்த கால 

பொழுதுகளை 

விலைக்கு வாங்குமளவு 

என்னை 

பணக்காரனாக்கி 

விடு என்று !!

================================

நாளைக்கென 

மிச்சம் இன்றி  

எல்லாம் சொல்லிவிட 

துடிக்கிறேன் ...


ஏதோ 

மிச்சம் வைத்து 

பிரிகிறேன் !!

====================================

உடல் 

இங்கேயே 

தங்கி விட்டது ...


பத்திரமாக 

பார்த்துக்கொள் ..

உன்னோடு 

வரும் 

என் உயிரை !!

=============================

இதயக்கோப்பையில் 

உன் நினைவுகள் 

தேநீராய் இனித்திருக்க 

இளைப்பாறுகிறேன் 

தனிமையில்...

=================================

என்ன 

கொடுமை இது ...


இதயத்தை 

திருடியவளிடமே 

மனு கொடுக்க 

வேண்டி இருக்கிறதே 

கண்டு பிடித்து 

கொடு என்று !

================================

கேள்விகள் 

நிறைய 

இருக்கின்றன 

என்னிடம் ...


பதிலாக 

நீ 

மட்டுமே 

இருக்கிறாய் !!

===========================

மதுக்குடத்தில் 

என்னை

அள்ளி போட்டது 

மது குடித்த 

இரண்டு கண்கள் 

================================

அட்சய திருதியையில் 

எது வாங்கினாலும் 

பல்கி பெருகுமாமே...

கொடுத்து விடு ...

ஓரக்கண்ணில்

இருக்கும் 

உன் காதலை !!

===============================

உந்தன் பார்வை மழை 

பொழியலாம் 

எந்தன் கவி மனது 

நிறையலாம் 

கனவுகள் கண்ணில் 

வரையலாம் 

கவலைகள் அதில் 

கரையலாம் 

================================

எழுதுவது இலக்கியம் என்றால் 

இலக்கணமாய் நீ 


வரைவது ஓவியம் என்றால் 

புள்ளிகளை நீ 


பாடுவது பாடல் என்றால் 

ராகமாய் நீ 


காதலே வாழ்க்கை என்றால்

நான் மடடும் ஏன் சோகமாய்

================================

ஒரு காதல் சாம்ராஜ்யம் 

கண்ணால் வரைந்தாள் 


இரு கண்களில்  நிழலாக 

கனவாய் கரைந்தாள் 

==============================



Saturday, March 25, 2023

சீனி

சீனி சிரிப்பை 
சிதற விட்டு போகிறாய்
நீ ...
சீனி குவியலில்  
சிற்றெறும்பாய் 
சிக்கிப் போகிறேன் 
நான் !!
==================

மரம் ஓய்வை விரும்பினாலும், 
காற்று விடுவதில்லை...
கரை ஓய்வை விரும்பினாலும், 
அலைகள் விடுவதில்லை...
மனது ஓய்வை விரும்பினாலும் 
உன் நினைவுகள் விடுவதில்லை !!
==========≈=≈=====≈===============
ஏனிந்த 
வன்மம் என்மீது  ..

ஜென்மங்களாய் 
காத்திருக்க 
வைக்கிறாயே !

===============
எந்தன் கனவுகள் 
பிரபஞ்சத்தைவிட 
பெரியதுதான் ...

உன் விழிகளுக்குள் 
எப்படி 
அடைபட்டது 
என்றுதான் புரியவில்லை !!
=====================
எல்லா மழையும் 
ஒரே மாதிரிதான் 
இருக்கிறது !!

நீ மட்டும் 
எப்படி 
ஒவ்வொரு மழையிலும் 
புதுசு புதுசாய் !!
================
நீ சூடும் 
மலர்கள் மட்டுமல்ல 
உன் 
கூந்தல் உதிரும் 
மலர்கள் கூட 
சொல்லி போகிறது 
ஏதோ ஒரு 
கவிதை !!
=================
இரண்டடியால் 
உலகையே 
அளந்து விட்டானாமே 
ஒருத்தன் ....
முடிந்தால் 
அளக்க சொல் 
உன் மீது 
நான் கொண்ட 
காதலை !!
=================
என் பார்வையை 
தொலைத்து விட்டு 
வந்திருக்கிறேன் ...
நீ 
என்னை
தொலைத்து விட்டு 
போன இடத்தில் !!
=====================
உச்சி வெயில் 
தகிக்கிறது ...
கொஞ்சம் 
விசிறிவிட்டு போ 
உன் 
விழிச்சிறகால் !!
================
ஓராண்டு 
ஆயுள் நீட்டி கிடைத்தால் 
என்ன செய்வாய் 
என்று கேட்டாள் ...
வேறென்ன 
உன்மீது 
இன்னொரு ஆயிரம் 
கவிதைகள் 
எழுதியிருப்பேன் !!
================
சுவாசிக்க 
காற்று  இல்லாமல் 
உயிரற்று கிடக்கின்றன 
சில வரிகள் ...
வாசிக்க 
நீ இல்லாமல் !!!
==============
உடலின் 
ஒவ்வொரு செல்லிலும் 
எழுதி வைத்திருக்கிறேன் 
உன் பெயரை ...

உன் 
கையிலிருக்கும் 
செல்லிலாவது '
வைத்திருக்கிறாயா 
என் பெயரை !
=================

வாசிக்க வா என
உன்னை
அழைக்குது
எனது கவிதை இதழ் ...

வா ... சிக்க ... வா என
என்னை
அழைக்குது 
உனது கவிதை இதழ்
======================

Sunday, March 19, 2023

சிட்டு குருவி

 இரு வரி 

கவிதையாவது 

எட்டி பார்க்காதா 

என் காகிதத்தில் ...


நீ ....


சாளர கதவின் மீது 

எட்டி பார்த்தால் ! 



நெல்லின் 

விதைகளை 

தூவ 

காத்திருக்கிறேன் 


வருவாயோ ....


மகிழ்ச்சியின் 

விதைகளை 

என்னுள் 

தூவ !


நீ கால் நனைக்க 

காத்திருக்கின்றன 

சிற்றோடைகள்  


நீ கழுத்தை 

சிலுப்பிக்கொள்ளும் 

அழகை தேடி  

ஊரெங்கும் வீசுகிறது 

தென்றல் 


நீ சிறகடிக்க 

தன் இதயம் திறந்து 

பரந்திருக்கிறது 

வானம் ...


உன்னை போலவே 

நானும் 

தேடுகிறேன் 

அரிசி 

புடைக்கும் 

என் 

பாட்டியை !



காங்க்ரீட் கோபுரங்களால்

உன்னை 

தள்ளி வைத்தாரோ !


மரங்களை வெட்டி 

உனக்கு 

கொள்ளி வைத்தாரோ !


மின்காந்த அலைகள் 

உன்னை 

அள்ளி 

போயினவோ !


எங்கள் 

இதய மேடுகளில் 

அறிவியல் 

பூத்து விட்டதால் 

களத்து மேடுகளில் 

உனக்கான 

நெல்மணிகள் 

பூக்கவில்லை !


நீ

இல்லாது போனால்

எதிர்காலத்தில் 

மனித தினம் 

என்ற ஒன்றை 

பூச்சி இனம்  

கொண்டாடுமோ !