Sunday, March 19, 2023

சிட்டு குருவியைத் தேடி

இரு வரி 
கவிதையாவது 
எட்டி பார்க்காதா 
என் காகிதத்தில் ...
நீ ....
சாளர கதவின் மீது 
எட்டி பார்த்தால் ! 
==========================
நெல்லின் 
விதைகளை 
தூவ 
காத்திருக்கிறேன் ...
வருவாயோ ....!?
மகிழ்ச்சியின் 
விதைகளை 
என்னுள் 
தூவ !
==========================
நீ கால் நனைக்க 
காத்திருக்கின்றன 
சிற்றோடைகள்  !!
==========================
நீ கழுத்தை 
சிலுப்பிக்கொள்ளும் 
அழகை தேடி  
ஊரெங்கும் வீசுகிறது 
தென்றல் !!
==========================
நீ சிறகடிக்க 
தன் இதயம் திறந்து 
பரந்திருக்கிறது 
வானம் ...!!
==========================
உன்னை போலவே 
நானும் 
தேடுகிறேன் 
அரிசி 
புடைக்கும் 
என் 
பாட்டியை !
==========================
காங்க்ரீட் கோபுரங்களால்
உன்னை 
தள்ளி வைத்தாரோ !
மரங்களை வெட்டி 
உனக்கு 
கொள்ளி வைத்தாரோ !
மின்காந்த அலைகள் 
உன்னை 
அள்ளி 
போயினவோ !
==========================
எங்கள் 
இதய மேடுகளில் 
அறிவியல் 
பூத்து விட்டதால் 
களத்து மேடுகளில் 
உனக்கான 
நெல்மணிகள் 
பூக்கவில்லை !
==========================
நீ
இல்லாது போனால்
எதிர்காலத்தில் 
"மனித தினம்"
என்ற ஒன்றை 
பூச்சி இனம்  
கொண்டாடுமோ ! ?
==========================

No comments:

Post a Comment