இரு வரி
கவிதையாவது
எட்டி பார்க்காதா
என் காகிதத்தில் ...
நீ ....
சாளர கதவின் மீது
எட்டி பார்த்தால் !
நெல்லின்
விதைகளை
தூவ
காத்திருக்கிறேன்
வருவாயோ ....
மகிழ்ச்சியின்
விதைகளை
என்னுள்
தூவ !
நீ கால் நனைக்க
காத்திருக்கின்றன
சிற்றோடைகள்
நீ கழுத்தை
சிலுப்பிக்கொள்ளும்
அழகை தேடி
ஊரெங்கும் வீசுகிறது
தென்றல்
நீ சிறகடிக்க
தன் இதயம் திறந்து
பரந்திருக்கிறது
வானம் ...
உன்னை போலவே
நானும்
தேடுகிறேன்
அரிசி
புடைக்கும்
என்
பாட்டியை !
காங்க்ரீட் கோபுரங்களால்
உன்னை
தள்ளி வைத்தாரோ !
மரங்களை வெட்டி
உனக்கு
கொள்ளி வைத்தாரோ !
மின்காந்த அலைகள்
உன்னை
அள்ளி
போயினவோ !
எங்கள்
இதய மேடுகளில்
அறிவியல்
பூத்து விட்டதால்
களத்து மேடுகளில்
உனக்கான
நெல்மணிகள்
பூக்கவில்லை !
நீ
இல்லாது போனால்
எதிர்காலத்தில்
மனித தினம்
என்ற ஒன்றை
பூச்சி இனம்
கொண்டாடுமோ !
No comments:
Post a Comment