வாங்கும்போது
24 காரட்தான் ....
எப்படி கணக்கிடுவது
நீ அணிந்தபின்பு
எத்தனை காரட் என்று !!
===================
எதற்கு
ஹால் மார்க் முத்திரை ...
உன் கழுத்தில்
இருப்பதே
தங்கத்திற்கு
தன்னிகரில்லா
தர முத்திரைதானே !!
======================
வெட்கி போனது
கோஹினூர் வைரம் ...
உனது
இதழில் துளித்த
பனித்துளி கண்டு !!
===================
மன்மதனின்
ரதியும் வந்தாள் ...
அவள் அழகில்
கொஞ்சம்
கடன் வாங்கி
சென்றாள் !!
ஊர்வசியும்
ஓர் நாள் வந்தாள்
அவளுக்கு
தோழி ஆனாள் !!
================
மல்லிகைப்பூவே
சிவந்ததேன் ....
மனதிற்குள் என்னை
கசந்ததேன் !!
=================
ஆனந்தம் நீராடும் நதியா
அலைகளில் காண்பது ரதியா
கண்ணில் விழுந்தது விதியா
காலதேவன் செய்த சதியா
==============================
தென்றல் நடந்தது மெல்ல
தேனாய் கவிதைகள் சொல்ல
தேனும் விஷமாய் கொல்ல
=================================
வண்ணங்கள் கூட்டும் அங்கமோ
மெருகேறிய அழகு தங்கமோ
எண்ணங்கள் அதில் தங்குமோ
என்றும் கூட வர ஏங்குமோ
==================================
உன் செந்தூரம் காட்டும் கலை
என் நெஞ்சோரம் வீசும் வலை
மயங்குது கோவில் சிலை
==================================
நீ பேசும்
சொற்களை
தந்தது
தமிழோ ...
அமுதமோ !!
==================================
வலிமையோடுதான்
எழுதுகிறேன் ...
நீ
தந்த வலி
என்
பேனாவுக்கு ஊற்றிய
மையோடு !
=================================
ஒரே ஒரு
வரம்தான்
கேட்பேன் கடவுளிடம் ...
உன்னோடு இருந்த
கடந்த கால
பொழுதுகளை
விலைக்கு வாங்குமளவு
என்னை
பணக்காரனாக்கி
விடு என்று !!
================================
நாளைக்கென
மிச்சம் இன்றி
எல்லாம் சொல்லிவிட
துடிக்கிறேன் ...
ஏதோ
மிச்சம் வைத்து
பிரிகிறேன் !!
====================================
உடல்
இங்கேயே
தங்கி விட்டது ...
பத்திரமாக
பார்த்துக்கொள் ..
உன்னோடு
வரும்
என் உயிரை !!
=============================
இதயக்கோப்பையில்
உன் நினைவுகள்
தேநீராய் இனித்திருக்க
இளைப்பாறுகிறேன்
தனிமையில்...
=================================
என்ன
கொடுமை இது ...
இதயத்தை
திருடியவளிடமே
மனு கொடுக்க
வேண்டி இருக்கிறதே
கண்டு பிடித்து
கொடு என்று !
================================
கேள்விகள்
நிறைய
இருக்கின்றன
என்னிடம் ...
பதிலாக
நீ
மட்டுமே
இருக்கிறாய் !!
===========================
மதுக்குடத்தில்
என்னை
அள்ளி போட்டது
மது குடித்த
இரண்டு கண்கள்
================================
அட்சய திருதியையில்
எது வாங்கினாலும்
பல்கி பெருகுமாமே...
கொடுத்து விடு ...
ஓரக்கண்ணில்
இருக்கும்
உன் காதலை !!
===============================
உந்தன் பார்வை மழை
பொழியலாம்
எந்தன் கவி மனது
நிறையலாம்
கனவுகள் கண்ணில்
வரையலாம்
கவலைகள் அதில்
கரையலாம்
================================
எழுதுவது இலக்கியம் என்றால்
இலக்கணமாய் நீ
வரைவது ஓவியம் என்றால்
புள்ளிகளை நீ
பாடுவது பாடல் என்றால்
ராகமாய் நீ
காதலே வாழ்க்கை என்றால்
நான் மடடும் ஏன் சோகமாய்
================================
ஒரு காதல் சாம்ராஜ்யம்
கண்ணால் வரைந்தாள்
இரு கண்களில் நிழலாக
கனவாய் கரைந்தாள்
==============================
No comments:
Post a Comment