சீனி சிரிப்பை
சிதற விட்டு போகிறாய்
நீ ...
சீனி குவியலில்
சிற்றெறும்பாய்
சிக்கிப் போகிறேன்
நான் !!
==================
மரம் ஓய்வை விரும்பினாலும்,
காற்று விடுவதில்லை...
கரை ஓய்வை விரும்பினாலும்,
கரை ஓய்வை விரும்பினாலும்,
அலைகள் விடுவதில்லை...
மனது ஓய்வை விரும்பினாலும்
உன் நினைவுகள் விடுவதில்லை !!
==========≈=≈=====≈===============
ஏனிந்த
வன்மம் என்மீது ..
ஜென்மங்களாய்
காத்திருக்க
வைக்கிறாயே !
===============
எந்தன் கனவுகள்
பிரபஞ்சத்தைவிட
பெரியதுதான் ...
உன் விழிகளுக்குள்
எப்படி
அடைபட்டது
என்றுதான் புரியவில்லை !!
=====================
எல்லா மழையும்
ஒரே மாதிரிதான்
இருக்கிறது !!
நீ மட்டும்
எப்படி
ஒவ்வொரு மழையிலும்
புதுசு புதுசாய் !!
================
நீ சூடும்
மலர்கள் மட்டுமல்ல
உன்
கூந்தல் உதிரும்
மலர்கள் கூட
சொல்லி போகிறது
ஏதோ ஒரு
கவிதை !!
=================
இரண்டடியால்
உலகையே
அளந்து விட்டானாமே
ஒருத்தன் ....
முடிந்தால்
அளக்க சொல்
உன் மீது
நான் கொண்ட
காதலை !!
=================
என் பார்வையை
தொலைத்து விட்டு
வந்திருக்கிறேன் ...
நீ
என்னை
தொலைத்து விட்டு
போன இடத்தில் !!
=====================
உச்சி வெயில்
தகிக்கிறது ...
கொஞ்சம்
விசிறிவிட்டு போ
உன்
விழிச்சிறகால் !!
================
ஓராண்டு
ஆயுள் நீட்டி கிடைத்தால்
என்ன செய்வாய்
என்று கேட்டாள் ...
வேறென்ன
உன்மீது
இன்னொரு ஆயிரம்
கவிதைகள்
எழுதியிருப்பேன் !!
================
சுவாசிக்க
காற்று இல்லாமல்
உயிரற்று கிடக்கின்றன
சில வரிகள் ...
வாசிக்க
நீ இல்லாமல் !!!
==============
உடலின்
ஒவ்வொரு செல்லிலும்
எழுதி வைத்திருக்கிறேன்
உன் பெயரை ...
உன்
கையிலிருக்கும்
செல்லிலாவது '
வைத்திருக்கிறாயா
என் பெயரை !
=================
வாசிக்க வா என
உன்னை
அழைக்குது
எனது கவிதை இதழ் ...
வா ... சிக்க ... வா என
என்னை
அழைக்குது
உனது கவிதை இதழ்
======================
No comments:
Post a Comment